Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞரின் கனவு இல்லம்.. வீடு இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம்.. தங்கம் தென்னரசு அடித்த சிக்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் நிதி பெற்று பயனாளிகளே வீடுகளை கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய தொடங்கினார். இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சூப்பர் திட்டத்தை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தரும் திட்டம் கலைஞர் அவர்களால் 1975ல் அறிமுகம் செய்யப்பட்டது.

kalaignar kanavu illam : The super scheme announced by Thangam Tennarasu in the budget of Tamil Nadu

அதனை தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி, கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் : குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் குறிப்பிடத்தக்க அம்சங்களை தாங்கி புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்." இவ்வாறு வீடுகள் குறித்து தங்கம் தென்னரசு கூறினார்.

இன்று பட்ஜெட் அறிவிப்பின் நிறைவாக வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய், வரியல்லாத வருவாய், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய தகவல்களையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிக்க உள்ளார்.

பட்ஜெட் அறிவிப்பிற்கு பின்னர் நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 4-வது முறையாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வேளாண் பட்ஜெட்டில் தமிழக விவசாயிகளுக்கு இந்த முறை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதன்பின்னர் சட்டசபையில் அதாவது வரும் புதன்கிழமை அன்று பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச உள்ளார்கள். அதன்பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, 22-ந் தேதி (வியாழக்கிழமை) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச உள்ளார்கள். அத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+