ராணி 2-ம் எலிசபெத் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு மருதநாயகம்- கமல்ஹாசன் நெகிழ்ச்சி இரங்கல்
சென்னை: மறைந்த பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் தம் வாழ்நாளில் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு 25 ஆண்டுகளுக்கு நடைபெற்ற மருதநாயகம் பட விழாதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு:

எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்
25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
1997-ம் ஆண்டு இந்தியாவுக்கு 3-வது முறையாக 2-ம் எலிசபெத் மகாராணி வருகை தந்தார். அப்போது சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் மருதநாயகம் திரைப்பட தொடக்க விழாவில் பங்கேற்றார் 2-ம் எலிசபெத். இந்த விழாவில் சுமார் 20 நிமிடங்கள் கலந்து கொண்டார் எலிசபெத் மகாராணி.
அப்போது தமிழக முதல்வராக இருந்த மறைந்த கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1750களில், இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வரி வசூல் உரிமையை பெற்றது; அப்போது கிழக்கிந்திய கம்பெனியில் இருந்த கான்சாகிப் யூசுப்கான் என்ற மருதநாயகம், வாழ்நாளின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்து வீரம் செறிந்த யுத்தம் நடத்தி வீரச்சாவடைந்தார். வரலாற்றில் அதிகம் அறியப்படாத மருதநாயகத்தின் வாழ்க்கையைத்தான் கமல்ஹாசன் ரூ80 கோடியில் திரைப்படமாக்க திட்டமிட்டு படத் தொடக்க விழாவை நடத்தினார். ஆனால் மருதநாயகம் திரைப்படம் கைவிடப்பட்டது. இருந்தபோதும் இன்றும் மருதநாயகம் திரைப்படம் எதிர்பார்ப்பை தரக் கூடிய பேசுபொருளாக தொடருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications