எலெக்ஷன் நேரத்தில் உங்கள் காலை பிடித்து கட்டு போடும் மந்திரியெல்லாம் இருக்கிறார்கள்.. கமல் தாக்கு
Recommended Video

சென்னை: தேர்தல் நேரத்தில் உங்கள் காலை பிடித்து கட்டு போடும் மந்திரியெல்லாம் இருக்கிறார்கள் என கமல்ஹாசன் கடும் விமர்சனம் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் காசிமேடு பகுதியில் வேட்பாளர் மவுரியாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் என் இளைய காலத்து நண்பர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். இது துறைமுகத்துக்கு அருகில் என்பதாலோ என்னவோ மாசு அதிகரித்து வாழ முடியாத நிலை உள்ளது.

பாதுகாக்க வேண்டியது
இதை விட அழகான இடங்கள் சென்னையில் இருக்கலாம். ஆனால் சென்னையின் உயிர் இங்கே இருப்பதாக நான் கருதுகிறேன். உழைப்பாளர்கள் வாழும் இடம் இது. இதை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை.

உழைக்க வந்தவர்
அதை செய்ய வந்திருக்கிறோம். இதுக்கு முன்னாடி வந்தவர்களும் இதையேதானே சொன்னார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் அளவு கோபத்துடன் அவர்கள் சொல்லவில்லை. எங்கள் கனவு வேறு அவர்களுடைய கனவு வேறு. போலீஸ் அதிகாரியாக இருந்த மவுரியா உழைத்து, களைத்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்திலும் உங்களுக்காக உழைக்க வந்துள்ளார்.

தேர்வு
இந்த பகுதி அவருக்கு தெரிந்த பகுதி.முகம் பார்த்து அடையாளம் கண்டுகொள்ள கூடியவர். என் மக்களை, என் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோபத்துடன் ஆதங்கத்துடன் இவர் இங்கே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்களைத்தான் நாங்கள் தேர்வு செய்துள்ளோம்.

தேர்தல் வரும் நேரத்தில்
தேர்தல் வரும் நேரத்தில் உங்கள் காலை பிடித்து கட்டு போடும் மந்திரியெல்லாம் இருக்கிறார்கள். இவர் தொகுதிக்கு வரவில்லை என நீங்கள் சொன்னால் உடனே ஆவணசெய்யப்படும். வராமல் இருக்கமாட்டார். வேலைக்கு சளைக்க கூடியவர் அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் வேலை செய்யாவிட்டால் அவர்களை ராஜினாமா செய்ய வைக்கக் கூடிய கட்சி மக்கள் நீதி மய்யம் என்றார்.

ஜெயக்குமாரை விளாசிய கமல்
மத்திய சென்னையில் பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு பாட்டியின் கால் மீது ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்துவிட்டது. உடனே பதறியடித்த ஜெயக்குமார் தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை பாட்டியின் காலில் கட்டாக கட்டி மருத்துவமனைக்கு அழைத்து செய்யுமாறு கூறியிருந்தார். இந்த சம்பவத்தைதான் கமல் விமர்சனம் செய்துள்ளார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications