ரஜினிகாந்துக்கு மத்திய பாஜக அரசின் தாதா சாகேப் பால்கே விருது- கமல்ஹாசன் பெரும் மகிழ்ச்சி
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய பாஜக அரசின் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெருமகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மததிய பாஜக அரசு, ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. ஆனால் தேர்தலுக்கும் இந்த அறிவிப்புக்கும் தொடர்பு இல்லை என்கிறார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications