ஜேஎன்யு மாணவர்கள் மீதான அராஜகம்.. நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழ்ந்து விடுமோ?.. கமல்ஹாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு என சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் கூறுகையில் நடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் இருப்பதாக நீண்ட காலமாக கூறுகின்றனர். அது இட்லி விலை போல் தான்.

Kamal Haasan says about Citizenship amendment act

திறமை தான் விலையை கூட்டுகிறது. மக்கள் பாராட்டால் தான் அதிகரிக்கிறது. முதன் முதலில் ரூ.250 சம்பளத்திற்கு வந்தேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு.

இதுபோல் தான் ஜி.எஸ்.டி. கொண்டு வந்தனர். பின்னர் அதை பின் வாங்க வேண்டிய நிலையில் அதில் மாறுதல்கள் செய்யப்பட்டன. சட்டங்கள் இரும்பு காய்ச்சி ஊற்றியது அல்ல. மக்களுக்காக செய்யப்படுவது தான்.

தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வர வேண்டியது. இவை காலங்காலமாக நடந்து வருகிறது. அதுபோல் மீண்டும் நிகழும் என்று நம்புகிறேன்.

டெல்லியில் ஜே.என்.யு. மாணவர்கள் மீதான அராஜகம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதுபோன்றவை நடந்துக் கொண்டு இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமோ என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+