இரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி?
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஏப்ரல் 6ஆம் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதனால் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. பல கட்சிகளிலும் உள்ள முக்கிய தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும், எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெற முடியும் என்பதைக் கண்டறியும் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வரும் சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆலந்தூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட கமல் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மநீம அதிக வாக்குகளைப் பெற்ற தொகுதிகளைக் கமல் தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி. கடந்த முறை இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மநீம பெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சுமார் 1. 45 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தது. மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியில் வரும் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தவிர கமலின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மூன்றாவது அணியும் உருவாகியுள்ளது. தற்போதுவரை மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமக மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே கூட்டணி அமைத்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications