கோவை தெற்குத் தொகுதியில் போட்டி- கமல்ஹாசன் நாளை வேட்பு மனுத் தாக்கல்
சென்னை: கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
சட்டசபை தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிடுவதாக கம்ல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகின்றனர்.

இதனால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்த தொகுதியில் கமல்ஹாசன் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
உயிரே உறவே தமிழே, வணக்கம். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். அன்று மாலை 6 மணிக்கு மண், மொழி, மக்கள் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்முட்டியில் நிகழ்கிறது. உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். வருக.
— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2021
இது தொடர்பாக கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
உயிரே உறவே தமிழே, வணக்கம். கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட நாளை மதியம் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். அன்று மாலை 6 மணிக்கு மண், மொழி, மக்கள் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்முட்டியில் நிகழ்கிறது. உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். வருக.
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications