மத்தாப்புப் புன்னகைகளை சிவகாசியில், மிட்டாய் இனிமையை கோவில்பட்டி காற்றில் உணர்ந்தேன்- கமல் ட்வீட்
சென்னை: கர்மவீரரின் ஊரில் (விருதுநகரில்) கட்டுக்கடங்கா உற்சாகத்தோடு மக்கள் கூட்டம் கூடியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நடிகர் கமல்ஹாசன் தமது பயணங்கள் தொடர்பாக அடுத்தடுத்து போட்ட ட்வீட்டுகளின் தொகுப்பு:
ஊருக்கு உழைத்திடல் யோகம் என கற்றுக்கொடுத்த ஆசிரியன் பாரதியின் எட்டயபுரம் வீட்டிற்குச் சென்றேன். பாரதி, உமறுப் புலவர், முத்துசுவாமி தீட்சிதர் போன்ற மேதைகள் அவதரித்த சிற்றூர்.

வளர்ச்சியின் சிறிய அடையாளம் கூட இன்றி கைவிடப்பட்டு கிடக்கிறது. சீரமைக்கவேண்டியவை ஏராளம். நமக்குத் தொழில் நாட்டுக்கு உழைப்பது.
கர்மவீரரின் ஊரில், கட்டுக்கடங்கா உற்சாகத்தோடு மக்கள் கூட்டம்; மத்தாப்புப் புன்னகைகளை சிவகாசியிலும், மிட்டாய் இனிமையை கோவில்பட்டிக் காற்றிலும் உணர்ந்தேன்.

தம் வீட்டு வாசல்களில் நின்று வெற்றி உமதே என குரலெழுப்பும் மாதர்களிடம் சொன்னேன் 'வெற்றி நமதே'. இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications