கமல் மனதில் அதிரடி திட்டம்?.. திருவாரூரில் களம் இறங்குகிறது மநீம??
இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து 2 நாளில் முடிவெடுக்கப்படும் என கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். ஆனால் இந்த தொகுதியில் போட்டியிடுவது சம்பந்தமாக இதுவரை கமல்ஹாசன் எந்தவித கருத்தும் சொல்லவில்லை.
ஏற்கனவே அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி என நான்முனை போட்டி நிலவும் நிலையில் கமல் கட்சியும் களம் இறங்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் மேலோங்கி வருகிறது.

நிலைப்பாடு
ஆனால் திருவாரூர் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து வருகிற 5-ந்தேதி அதாவது நாளை சென்னையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கமல் பேட்டி
இந்நிலையில் இது சம்பந்தமாக கமல் பேட்டி அளித்துள்ளார். இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து கமல் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் சொன்னதாவது:

இரு தினங்களில் முடிவு
"திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்படும். பின்னர் நாளை அல்லது நாளை மறுநாள் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.

விவசாயிகளுக்கு ஆதரவு
தொடர்ந்து பேசிய கமல், உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கக் கூடாது என விவசாயிகள் போராடி வருவதை மக்கள் நீதி மையம் ஆதரிக்கிறது என்றும் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications