பெற்றோருக்கு பயந்து நாய் கடித்ததை மறைத்ததால் நடந்த துயரம்.. காஞ்சிபுரம் சிறுவனுக்கு இப்படியா ஆகணும்
காஞ்சிபுரம்: தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் நாய் கடித்து 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் திட்டுவாங்க என பயந்து போய் நாய் கடித்ததை சிறுவன் சொல்லாமல் இருந்து இருக்கிறார். இதில் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சாலையில் நடந்து சென்றாலே கடிக்கப் பாய்வதாகவும் ஒரு சில தொடர்ந்து மாநகராட்சிகளுக்கு புகார் தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். எனினும் இந்த சம்பவம் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தான் காஞ்சிபுரத்தில் தெரு நாய் கடித்ததில் 9 ஆம் வகுப்பு மாணவன் பலியாகி உள்ளான். காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சின்னிவாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாஸ்கரின் மகன் சபரிவாசன் (வயது 14). சபரிவாசன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளி சென்று விட்டு வீட்டில் இருக்கும் நேரம் நண்பர்களுடன் அப்பகுதியில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் வெளியே நண்பர்களுடன் சபரிவாசன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்துள்ளது. இதில் சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
எனினும் நாய் கடித்தது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூறாமல் இருந்திருக்கிறான். நாய் கடித்ததை சொன்னால் பெற்றோரிடம் அடிப்பார்கள் என பயந்துபோய் அதை சொல்லாமலேயே மறைத்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிவாசனின் செயல்களில் சற்று மாறுபாடு தெரிந்தது.
வழக்கம் போல் இல்லாமல் அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. இதையடுத்து தந்தை பாஸ்கர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சபரிவாசனை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு ரேபிஸ் நோய் முற்றி இருந்தது தெரியவந்தது. மேலும் சிறுவனும் நாய் போன்று செயல்பட்டதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காததால் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்னர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சபரிவாசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர் திட்டுவார்கள் என்று நினைத்து நாய் கடித்ததை மறைத்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications