அரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்
சென்னை: அரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பார்கள் என தூத்துக்குடி எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழை வளர்க்க மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அது போல் தமிழகத்தில் இந்தியை திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசாங்கம் தமிழை வளர்ப்பதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள்?

நிதி ஒதுக்கீடு
தற்போது கூட பட்ஜெட் முடிந்துவிட்டது. அதில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, சம்ஸ்கிருதம், ஹிந்தி தவிர மற்ற மொழிகளை வளர்ப்பதற்கு எந்த அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாக தெரிவிக்கட்டும்.

தெளிவாக
எந்த ஒரு திட்டத்திற்கும் ஆங்கிலத்தில் கூட பெயர் வைக்காத மத்திய அரசு, எல்லா திட்டங்களுக்கும் இந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள். இதிலிருந்து தமிழை எந்த அளவிற்கு வளர்ப்பார்கள் என தெளிவாக தெரிகிறது.

விவசாயம்
பெட்ரோலை உணவாக உண்ண முடியாது. அடிப்படையில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. அதனால் தொழில் வளர்ச்சிக்காக இடம் ஒதுக்கப்படுகிறது. அதே போல் விவசாயத்திற்கும் தனி இடங்கள் ஒதுக்க வேண்டும்.

விளை நிலங்கள்
அவ்வாறு ஒதுக்கி அந்த இடங்களில் உணவு தரக் கூடிய நிலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. எட்டு வழிச்சாலை விவகாரத்தில் என்ன பெயர் மாற்றினாலும் மக்களின் விளை நிலங்களை பறிக்கக் கூடிய எதையும் திமுக ஏற்காது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications