டெல்லி அரசியலுக்கு முழுக்கு.. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் களமிறங்குகிறார் கனிமொழி? எந்த தொகுதி?
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, தனது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையை நோக்கி நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், மாநில அளவிலான தேர்தல் அரசியலுக்குள் நுழையும் முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, 2026 தேர்தலுக்குப் பிறகு கனிமொழி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து, டெல்லி அரசியல் களத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின் எம்பி பதவியை ராஜினாமா செய்வார். எம்பியாக தமிழகத்தின் குரலை தேசிய அளவில் வலுவாக ஒலிக்கச் செய்த அவர், இனி மாநில அரசியலில் கவனம் செலுத்தும் திமுக தலைமை எடுத்த ஒரு வியூக முடிவாக இது கருதப்படுகிறது.
தமிழக அரசியலுக்கு திரும்பும் கனிமொழி
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தமிழக அரசியலில் மேலும் நேரடியான பங்களிப்பை வழங்க கனிமொழி முனைந்துள்ளார். அவர் வெற்றிபெற்றால், மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அனுபவம், அரசியல் முதிர்ச்சி, மற்றும் வலுவான தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை மாநில நிர்வாகத்திற்குப் பேருதவியாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் பெண்கள் இருந்தாலும்.. வலுவான முகம் போன்ற பெண் அமைச்சர்கள் இல்லை. அதை சரிகட்டவே கனிமொழியை களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
கனிமொழி குழு
ஏற்கனவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கனிமொழிக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற பெயரில் நடத்தப்பட்டு கனிமொழி மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கு இதுவே காரணம் என்கிறார்கள் .
அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திருச்செந்தூர் தொகுதி, சட்டமன்ற அரசியலில் அவர் நுழைவதற்கு ஏற்ற வலுவான தேர்வு என கருதப்படுகிறது. இத்தொகுதியில் திமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இந்த நகர்வைப் பார்க்கும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள், முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனிமொழி திட்டம்
கனிமொழியின் இந்த அரசியல் நகர்வு, திமுகவின் நீண்டகால தலைமைக்கான திட்டமிடலில் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மூத்த தலைவர்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வருவது நிலையான ஆட்சிக்கு அவசியம் என தலைமை கருதுகிறது. நாடாளுமன்றத்திலிருந்து மாநில சட்டமன்றத்திற்கு இடம்பெயர்வது, தமிழக நலன் சார்ந்த அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் அடையாளமாக உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், கனிமொழியின் இந்த திட்டம் தமிழக அரசியலில் தீவிர விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் எதிர்கால வியூகம் மற்றும் அதன் தலைமை கட்டமைப்பை வடிவமைப்பதில் அவரது இந்த முடிவு முக்கியப் பங்காற்றும் எனக் கூறப்படுகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications