'தமிழர்கள் அடிமைகள்' என பேசிய கர்நாடகா நீதிபதி- நடிகை கஸ்தூரி கைதை கோர்த்துவிட்டு சீமான் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தம்முடைய கருத்தைத் திரும்பப்பெற்று, தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாதது ஏன்? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் கடந்த 26.11.2024 அன்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, கர்நாடகம் தனிமாநிலமாக உருவெடுத்த 'ராஜ்யோத்சவா' விழாவில் பங்கேற்று பேசிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகுமார் அருண், ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, 'பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர், ஆனால் கன்னடர்கள் அப்படி இருக்கவில்லை', எனவும் பெங்களூருவில் தமிழர்கள் உள்ளிட்ட பிறமொழியினர் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது எனவும் பேசி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

karnataka tamilnadu seeman

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய துணைகண்டத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுமே அடிமைப்பட்டிருந்தனர். தமிழர்கள் மட்டும் அடிமைப்பட்டு இருந்ததுபோல் நீதிபதி அருண் பேசியிருப்பது வேண்டுமென்றே தமிழர்களைச் சீண்டிப்பார்க்கும் சுடுசொல்லாகும்.

தமிழ் மக்களின் விடுதலை உணர்வானது மற்ற மாநிலத்தவரின் உணர்வுக்கு சற்றும் சளைத்ததல்ல. இந்த நாட்டின் விடுதலைக்குப் போராடி உயிர் ஈகம் புரிந்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களைத் தந்த மண் தமிழர் மண். பெங்களூரு, குடகு உள்ளிட்ட தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்துவரும் பல நிலப்பகுதிகளை மொழிவாரி மாநில எல்லைப்பிரிப்பின்போது தமிழ்நாடு இழந்தது. அதுமட்டுமின்றி, தமிழர்களின் உழைப்பைச்சுரண்டி அவர்களின் குருதியில் பொன் விளைந்த நிலம் கோலார் பகுதியாகும். எனவே பூர்வகுடி தமிழர்களை அண்டிப்பிழைக்க வந்த அகதிகள் போலவும், தமிழர்கள் ஆங்கிலேயருக்கு ஆயுட்கால அடிமைகளாக இருந்ததுபோலவும் நீதிபதி இந்திரகுமார் அருண் பேசி இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாதது ஏன்? கர்நாடக நீதிபதி கூறிய கருத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டதாக கூறி, கொதித்தெழுந்து தனிப்படை அமைத்து சிறையிலடைத்த திமுக அரசு தமிழர்களை இழிவுப்படுத்திய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? தமிழர்கள் என்றால் அமைதிகாப்போம், மற்ற இனத்தவர்களுக்காகத் துடிதுடிப்போம் என்றால் தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது யாருக்கான ஆட்சி என்பது இதிலிருந்தே தெளிவாகிறது.

ஆகவே, தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தம்முடைய கருத்தைத் திரும்பப்பெற்று, தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+