மேகதாது அணை.. காவிரி நதிநீர் ஆணையத்தில்.. விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த கர்நாடக அரசு
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக எம்பிகள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் விஷ்வேஸ்வர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை குறித்து, கர்நாடக அரசு அறிக்கை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் ஜீவ நதியாகக் கருதப்படும் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசு இந்த அணையைக் கட்டினால் டெல்டா பகுதியில் உள்ள லட்சக் கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன் கர்நாடக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றான மேகதாது விவகாரத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒரே அணியில் திரண்டுள்ளனர். இது தொடர்பாகப் பிரதமர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரைத் தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு கடந்த சில நாட்களுக்கு முன் தான் நேரில் சந்தித்து வலியுறுத்தியது.
இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மதிமுக எம்பி வைகோ மற்றும் திமுக எம்பி சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் விஷ்வேஸ்வர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை குறித்து, கர்நாடக அரசு அறிக்கை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications