கள்ளக்காதலி கையில் மிளகாய் தூள்.. நள்ளிரவில் நடக்கும் ஏடாகூடங்கள்! மனைவி துரோகத்தால் உறைந்த கர்நாடகா
சென்னை: ஹனிமூன் கொலைகள், பூச்சி மருந்து கொலை, சாப்பாட்டில் விஷம், என தங்களது கள்ளக்காதலனுக்காக, தாலி கட்டிய கணவனை கொலை செய்ய பெண்கள் துணிந்து வருகிறார்கள்.. மற்றொருபுறம், தகாத உறவில் ஈடுபட்டதையறிந்து, ஆத்திரத்தில் மனைவிகளை கொல்லும் கணவன்மார்களும் பெருகி வருகிறார்கள்.. இந்த சம்பவங்களை நினைத்து, பொதுமக்களும் கதி கலங்கி போயிருக்கிறார்கள்.. இந்நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணையும் நடக்கிறது.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கமலாப்புரா தாலுகா நரோனா பகுதியிலுள்ளது முரடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர்கள் அம்பரீஷ், அஜய் .. இவர்கள் 2 பேருக்குமே 28 வயதாகிறது.. இருவருமே நண்பர்கள்.. இருவருமே தொழிலாளிகள்.. இருவருக்குமே திருமணம் முடிந்து, மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

தகாத உறவு
நெருங்கிய நண்பர்கள் என்பதால், அம்பரீஷ், அடிக்கடி அஜயின் வீட்டிற்கு சென்று வருவார்.. நாளடைவில் அஜயின் மனைவியுடன் அம்பரீஷூக்கு தகாத பழக்கம் ஏற்பட்டது... இதனால், கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில், அம்பரீஷூடன் உல்லாசமாக இருந்துள்ளார் அஜய்..
ஒருநாள் இந்த விஷயம், அஜய்க்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதனால், மனைவியையும், அம்பரீஷையும் கண்டித்தார். இருவருமே அவரது பேச்சை கேட்கவில்லை.. நிம்மதியாக இருந்த தன்னுடைய குடும்பத்தை குலைத்த நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார் அஜய்.. இதற்காக நாளும் குறித்தார்..
மறைவிடத்தில் கொடூரம்
சம்பவத்தன்று இரவு, தனியாக பேசவேண்டும் என்று சொல்லி, அம்பரீஷை, கிராமத்துக்கு வெளியே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார் அஜய்.. தன்னுடைய நெருங்கிய நண்பரையும் இருட்டு பகுதியில் மறைந்திருக்கும்படி கூறினார்.
அம்பரீஷூடன் மறைவிடத்துக்கு சென்றதுமே அஜய், தன்னுடைய மனைவியை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார்.. இதனால் நண்பர்களுக்குள் மீண்டும் தகராறு வெடித்தது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அஜய், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து, அம்பரீஷை கத்தியால் குத்தி கொலை செய்தார்... பிறகு, நண்பனை கொலை செய்தது குறித்து, நரோனா போலீசாருக்கு அஜயே தகவல் அளித்தார்.
தலைமறைவு நண்பர்
அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றதுமே, அவர்களிடம் அஜய் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, அம்பரீஷின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
பிறகு அஜய்யிடம் நடத்திய விசாரணையில் மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்ததால்தான், நண்பனை கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.. ஆனால், கொலைக்கு உதவிய அஜயின் நண்பர் தலைமறைவாகிவிட்டதால், அவரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
மண்டை தாக்கினார்
கடந்த வாரம் இதே கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டத்திலுள்ள கடசெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் இப்படியொரு கொடுமை நடந்தது.. சங்கரமூர்த்தி 52 வயது நபரின் மனைவி பெயர் சுமங்கலா. அங்குள்ள பெண்கள் விடுதியில் சமையல் வேலை செய்து சுமங்கலாவுக்கு நாகராஜூ என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதை சங்கரமூர்த்திக்கு கண்டிக்கவும், கணவரை போட்டுத்தள்ள சுமங்கலா முடிவு செய்தார்..
உடனே சங்கரமூர்த்தியின் கண்ணில் மிளகாய்பொடியை தூவினார். பிறகு கட்டையை எடுத்து கணவரின் மண்டையை தாக்கினார்.. பிறகு அவரது காலை தலைக்கு நேராக தூக்கி அழுத்தினார்... இதில் முதுகெலும்பு முறிந்து, இறந்தேவிட்டார் கணவர்..
தரையெல்லாம் மிளகாய் பொடி
பிறகு கள்ளக்காதலன் உதவியுடன் சங்கரமூர்த்தியின் சடலத்தை சாக்குப்பையில் கட்டி 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிணற்றில் வீசிவிட்டார்கள்.. போலீசார் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான், தரையெல்லாம் மிளகாய் பொடி கிடந்தது... படுக்கையறையில் போர்வைகள் அலங்கோலமாக கிடந்தன
பிறகு சுமங்கலாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், இன்னொரு கள்ளக்காதல் கொலை கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான்












Click it and Unblock the Notifications