தலைவர் பதவிக்காக மிக மிக கடும் முயற்சியில் கார்த்தி சிதம்பரம்! மவுனம் கலைக்காத டெல்லி மேலிடம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை கைப்பற்றியே தீர வேண்டும் என்பதில் முன்பைக் காட்டிலும் இப்போது மூர்க்கம் காட்டுகிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள அவர், இது தொடர்பாக பிரியங்கா காந்தியையே நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தன்னை நியமிக்கும்பட்சத்தில், எம்.பி.சீட்டை கூட அவர் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆக வேண்டும் என்பது தனது ஆசை என ஒளிவுமறைவின்றி பல பேட்டிகளில் மிகவும் வெளிப்படையாக கூறி வந்தவர் கார்த்தி சிதம்பரம்.

ராகுல் காந்தியுடன் கூட இப்போது இணக்கமாக செல்லத் தொடங்கியுள்ள கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்காக மிக மிக கடும் முயற்சிகளை சலிக்காமல் முன்னெடுத்து வருகிறார். ஆனாலும் காங்கிரஸ் தேசியத் தலைமை இன்னும் இந்த விாகாரத்தில் மவுனம் கலைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகது. ப.சிதம்பரமும் தனது மகனுக்காக கட்சி தலைமையிடம் பேசி வருவதாக தெரிகிறது.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை காட்டிலும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி அதிகாரமிக்கது எனக் கருதுகிறார் கார்த்தி சிதம்பரம். அதுமட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றிலும் தலைவர் பதவி தன்னை இடம்பெற வைக்கும் எனக் கணக்குப் போடுகிறார். இதனால் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்காக கட்சி மேலிடத்திடம் இந்தளவுக்கு மன்றாடி வருகிறார். கார்த்தி சிதம்பரத்தை பொறுத்தவரை சற்று தடாலடியாக பேசக் கூடியவர் என்பதே அவருக்கான மைனஸ் பாயிண்டாக பார்க்கிறது காங்கிரஸ் தேசிய தலைமை.
ஏனெனில் மாநிலத் தலைவராக இருப்பவருக்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம். அதேபோல் கூட்டணிக் கட்சிகளை தந்திரமாக அணுசரித்து போக வேண்டிய போக்கும் அவசியம். இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரை மாற்றக்கோரி அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கார்கேவுக்கு கடிதம் மேல் கடிதங்கள் அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications