Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது நியாயமே இல்லிங்க.. அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜகவின் கரு.நாகராஜன் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய முரண்பாடுகளை கொண்டு இவ்வளவு பெரிய முடிவுகளை திட்டமிடுவது நியாமானது அல்ல என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நகராஜன் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைமுகமாக பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கள் ஏற்கெனவே இருந்த சலசலப்புகளை பஞ்சாயத்துக்களாக வெடிக்கச் செய்தது. அதிமுகவின் தலைவர்கள் அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர்.

Karu Nagarajan comments on AIADMK alliance break with BJP

குறிப்பாக கடந்த 14ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் அண்ணாமலை மீதான விமர்சனங்கள் கூர்மையடைந்தன. ஏற்கெனவே அண்ணாமலை மீது பாஜக தலைமையிடம் அதிமுக ஏராளமான புகார்களை அளித்திருந்தது. இப்படி இருக்கையில், அண்ணா குறித்து அவர் பேசியதற்கு கூட பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. எனவேதான் அண்ணாமலை மீதான் விமர்சனங்கள் சூடுபிடித்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.

இதனையடுத்து இது குறித்து இரு தினங்களுக்கு முன்னர் விரிவாக பேட்டியளித்த ஜெயக்குமார், "எங்களை பொறுத்த அளவில் கட்சியின் மறைந்த தலைவர்கள், மூத்த தலைவர்கள் குறித்த அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது கட்சி முடிவு. கட்சி முடிவைதான் நான் அறிவிக்கிறேன்" என்று கூறினார்.

அதேபோல பாஜக மாநில தலைவரை மாற்றம் செய்தால் இந்த கூட்டணி இறுதியாகும்? நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, "மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிப்பதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை. இப்படியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு கூட்டணி தேவையா? என்று தொண்டர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எனவே இந்த கூட்டணி தேவையில்லை என்பதுதான். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.

இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக எதையும் கூறாத நிலையில், ஜெயக்குமார் கூறுவதை பெரியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பாஜக நிர்வாகிகள் கூறி வந்தனர். இந்த சூழலில்தான் இன்று அவசரமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட செயலாளர்களும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Karu Nagarajan comments on AIADMK alliance break with BJP

இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், "சிறிய முரண்பாடுகளை கொண்டு இவ்வளவு பெரிய முடிவுகளை திட்டமிடுவது நியமானது அல்ல" என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "அதிமுகவின் கூட்டணி விலகல் தொடர்பாக தேசிய தலைமை என்ன முடிவெடுத்திருக்கிறதோ அதைத்தான் நாங்கள் தெரிவிக்க முடியும். அதுவரை நாங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.

மதுரை மாநாட்டை பற்றி விமர்சித்ததாக கூறுகிறார். அப்படி அவர் விமர்சித்ததை நிரூபிக்க முடியுமா? அண்ணாவை பற்றி எங்கள் தலைவர் அண்ணாமலை எத்தனையோ முறை புகழ்ந்து பேசியிருக்கிறார். ஏதோ ஒரு வரலாற்று சம்பவங்களை சுட்டிக்காட்டும்போது அதில் ஏற்படுகிற சிறிய முரண்பாடுகளையெல்லாம் வைத்து இவ்வளவு பெரிய தேர்தலுக்கு அவர்கள் திட்டமிடுவது நியாயமானது அல்ல" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+