அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா புகழாரம்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டினார், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன், இன்று, ஏற்பாடு செய்திருந்த "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்" என்ற பெயரிலான இணையவழி கருத்தரங்கிற்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா வீடியோ வடிவில் வாழ்த்து உரை அனுப்பியிருந்தார்.

அதில் எடியூரப்பா பேசுகையில், கருணாநிதிக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. பெங்களூரில் மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை 2009ம் ஆண்டு எனது ஆட்சியின்போதுதான் திறந்து வைத்தேன். அந்த விழாவில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி கலந்து கொண்டார். இருவரும் ஒரே மேடையில் விழாவில் பங்கேற்றோம்.
இரு மாநில மக்களிடையே உறவு பலம்பெற திருவள்ளுவர் சிலை திறப்பு விழா முக்கிய காரணமாக இருந்தது. சமுதாயத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. இந்த பிறந்த நாள் விழாவில் அவரை நினைவு கூர்கிறேன். இவ்வாறு எடியூரப்பா தனது வாழ்த்து உரையில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications