ஆதவ் அர்ஜுனா கைதாகிறாரா? சென்னையில் உள்ள வீட்டுக்கு சென்ற கரூர் போலீஸ்.. கடிதத்தில் இருப்பது என்ன?
சென்னை: சென்னையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு கரூர் போலீசார் வருகை தந்துள்ளனர். போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த கரூர் போலீசார், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கேட்டு கடிதம் அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் பரப்புரை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் எப்படி நடந்தது என்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா வன்முறையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு அதை நீக்கியிருந்தார். இந்த பதிவு தொடர்பாகவும் ஆதவ் அர்ஜுனா மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆதவ் அர்ஜுனா சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தான் இருந்து வருகிறார். நேற்று கூட செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று அவரது இல்லத்திற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். கருர் போலீசார் ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு வருகை தந்தனர். அப்போது ஒரு கடிதம் ஒன்றை அவரிடம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில் தவெக ஐடி விங் பிரிவு கரூர் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கொடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது கரூர் பரப்புரை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கொடுக்குமாறு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீஸ் வந்தது தவெகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி












Click it and Unblock the Notifications