3 நாளாக சீமான் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா? பிரஸ் மீட்டில் கோர்த்துவிட்ட மனைவி கயல்விழி!
சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக சென்னை போலீசில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
சீமான் , மனைவி கயல்விழியுடன் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அதன் பின்னர் செய்தியாளர்களை மனைவி கயல்விழியுடன் சந்தித்தார் சீமான்.

இந்த சந்திப்பின் போது தொடக்கம் முதலே படு சீரியசாகவே பேசிக் கொண்டிருந்தார் சீமான். கடைசியாக சீமான் மனைவி கயல்விழியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கயல்விழி, எனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை. எல்லோரும் எனக்கு ஆறுதல் சொல்லும் போது மட்டும் எதற்கு ஆறுதல் சொல்கிறார்கள்? என நினைத்து கொண்டேன். மலைபோல அவர் இருக்கும் போது எங்களுக்கு என்ன மன உளைச்சல் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சீமான், ஒரே ஒரு இடத்தில என் மீது கோபப்பட்டாங்க.. குரல் வளைய பிடிச்சுகிட்டு.... ச்சீ.. இவ்வளவு பெண்கள் இருக்கிற கொல்லையில உனக்கு பழகுறதுக்கு ஒரு பொம்பளைய பிடிச்சுருக்க பாரு என திட்டு விழுந்தது. அதற்கு பிறகு இதனைப் பற்றி எல்லாம் பேசுவது இல்லையே என சீமானும் கயல்விழியும் கைகளில் சியர்ஸ் அடித்த படியே பதில் அளித்தனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர், 3 நாட்களாக மனைவி ஸ்டேட்டஸ் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்ன காரணம் என கேள்வி கேட்டார். இந்த கேள்வி விழுந்த உடன், சீமான், மனைவி கயல்விழி உள்ளிட்டோர் குபீரென சிரித்துவிட்டனர்.
அத்துடன் முகமெல்லாம் சிரிப்பாக, கேளுங்க...கேளுங்க.. என உற்சாகமாக செய்தியாளரை தூண்டிவிட்டார் சீமான் மனைவி கயல்விழி.

இதற்கு பதிலளித்த சீமான், மனைவி ஸ்டேட்டஸ்னா யாரும் குறுக்க வராதீங்க என சிரித்தபடியே வெட்கப்பட்டு நகர்ந்தார் சீமான்.
ஆனால் சீமான் மனைவி கயல்விழியோ, Committed என சிரித்தபடியே விளக்கம் தர ஆமா, Committed என தலையாட்டியபடியே பதில் தந்தார் சீமான்.












Click it and Unblock the Notifications