கிளாம்பாக்கம் 100 பஸ்கள்.. மலை கிராமங்களுக்கு பறக்கும் பேருந்துகள்! சென்னை டூ சேலம் தவெக அரசு ஸ்பீடு
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறையை மேம்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் மலைக் கிராம மக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அமைச்சர் தமிழன் பார்த்திபன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சென்னை கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேருந்து வசதிகளும், சேலம் கருமந்துறை மலைக் கிராமங்களில் புதிய வழித்தட நீட்டிப்புச் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இப்போது அதிரடியான பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் பொறுப்பேற்றது முதல், துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்
அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கைகளை மட்டுமே நம்பியிருக்காமல், அமைச்சரே நேரடியாக பல மாவட்டங்களுக்குச் சென்று, அரசு பஸ்களில் பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறாராம்.
இந்த நேரடி கள ஆய்வுகளின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பேருந்து வசதியே இல்லாத பகுதிகள் மற்றும் தொலைதூர மலைக் கிராமங்களைக் கண்டறிந்து, அங்கு உடனடியாக பேருந்து சேவைகளைத் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
அமைச்சரின் இந்த உத்தரவை அடுத்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களின் தேவைக்கேற்ப போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும், அவசரத் தேவைகளுக்காக எப்போதும் 100 மாற்றுப் பேருந்துகளை (Standby Buses) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலையும் பயணியர் கூட்டத்தையும் சமாளிக்க இந்த ஏற்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் கிளாம்பாக்கத்தில் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மலை கிராமங்களுக்கு பஸ் வசதிகள்
அதுமட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி நடந்து வருவதாகவும், பட்டியல் கிடைத்தவுடன் அங்கு புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சரின் இந்த உத்தரவு சேலம் மாவட்டத்தில் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கருமந்துறை, தலக்கரை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு இடையேயான புறநகர்ப் பேருந்து வழித்தட நீட்டிப்புச் சேவையை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தற்போது முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.
கருமந்துறையில் நடந்த இந்த தொடக்க நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். போக்குவரத்துத் துறையின் உயர் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
புதிய வழித்தட நீட்டிப்பு
இந்த புதிய வழித்தட நீட்டிப்பின் மூலம், ஆத்தூரிலிருந்து புறப்பட்டு தும்பல், கருமந்துறை வழியாக சூலாங்குறிச்சி வரை மட்டுமே இயங்கி வந்த அரசுப் பேருந்து, இனிமேல் சூலாங்குறிச்சியோடு நின்றுவிடாமல், மேலும் நீட்டிக்கப்பட்டு தலக்கரை மற்றும் பாச்சாடு ஆகிய மலைக் கிராமங்களுக்கும் செல்லவுள்ளது.
இந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வசதிக்காகக் காலை 7.35 மணிக்கும், மாலை 5.40 மணிக்கும் பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் பெரும் பயனடைவார்கள்.
தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப் பிரதேசங்களுக்கும் பேருந்து வசதியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் போக்குவரத்துத் துறை எடுத்து வரும் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications