தினகரன் டீமிலிருந்து இன்னொரு விக்கெட்டும் காலி.. அதிமுகவுக்கு தாவினார் மாஜி அமைச்சர்!
திமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன்
சென்னை: டிடிவி தினகரன் அணியில் திரும்பவும் ஒரு விக்கெட் விழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் அமமுகவில் இருந்து விலகி இப்போது மீண்டும் அதிமுகவிலேயே இணைந்து விட்டார்.
அதிமுகவின் சீனியர்களில் ஒருவர் கிணத்துக்கடவு தாமோதரன். கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவர்.
அதிமுக சார்பில் 3 முறை எம்எல்ஏ, ஒரு முறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர்.
கட்சி இரண்டாக பிரிந்ததும், ஓபிஎஸ் அணியில் வந்து சேர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார்.

விலகினார்
இதற்கு அப்போது அவர் சொன்ன காரணம், "ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பலரும் டம்மியாகத்தான் இருக்கிறார்கள். எங்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. அதனால்தான் டிடிவியிடம் வந்து சேர்ந்தேன்" என்றார்.

செயல்பாடுகள்
ஆனால் முழுசா 6 மாசம்கூட முடியவில்லை. இந்நிலையில், அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவிலேயே இணைந்துள்ளார். இதற்கு இப்போது அவர் சொல்லும் காரணம், தினகரனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையாம்.

டிடிவி தினகரன்
அதிமுகவுக்கு நல்ல நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தாமோதரன் இங்கு வந்து மீண்டும் சேர்ந்துள்ளார். டிடிவி தினகரன் பக்கம் இருப்பவர்கள் திமுகவுக்கு செல்வது போய் இப்போது அதிமுகவுக்கும் வர ஆரம்பித்துள்ளனர்.

அதிமுக பலம்
திமுகவுக்கு மவுசு குறைந்துவிட்டதா? அல்லது அதிமுகவின் பலம் அதிகமாகி கொண்டு போகிறதா என்றுதான் தெரியவில்லை. ஆக மொத்தம் தொடர் தோல்வியையே சந்தித்துவரும் தினகரனுக்கு இதுவும் பெரிய அடிதான்!












Click it and Unblock the Notifications