கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்
சென்னை: யூடியூபர் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இன்னும் 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கிஷோர் கே சாமி.
Recommended Video
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் திமுக ஐடி விங்க் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், ஜூன் மாதம் 17ம் தேதி கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குவிந்த புகார்கள்
கிஷோர் சாமி சிறை சென்றதும், அவரால் சமூக வலைத்தளங்களில் பாதிப்புக்கு உள்ளான பலரும் வரிசையாக புகார்களை அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதன்பேரில் இதுவரை கிஷோர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3வது புகாரின்பேரிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்திருந்தனர்.

பாய்ந்தது குண்டர் சட்டம்
இந்த நிலையில்தான், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் கிஷோர் சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல், சிறைத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

ரோகிணி புகார்
சினிமா நடிகை ரோகிணியும் கிஷோர் மீது புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிஷோரால் பாதிக்கப்பட்ட பலரும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பெண் பத்திரிக்கையாளர்கள்
பெண் பத்திரிகையாளர்கள் சிலர் கிஷோர் சாமி மீது ஏற்கனவே வழங்கிய புகார்களுடன் இப்போது வழங்கியுள்ள புகார்களை சேர்த்து பல காவல் நிலையங்களில் விசாரணை ஆரம்பித்துள்ளது. புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில்தான், கிஷோர் சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

1 வருடம் சிறைதான்
சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க கூடிய சூழ்நிலையில் அது தொடர்பாக அவர் தாம்பரம் நீதிமன்றம் ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இப்போது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது என்பதால் 1 ஆண்டு காலம், கிஷோருக்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications