கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம்
சென்னை: யூடியூபர் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இன்னும் 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கிஷோர் கே சாமி.
Recommended Video
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் திமுக ஐடி விங்க் நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், ஜூன் மாதம் 17ம் தேதி கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குவிந்த புகார்கள்
கிஷோர் சாமி சிறை சென்றதும், அவரால் சமூக வலைத்தளங்களில் பாதிப்புக்கு உள்ளான பலரும் வரிசையாக புகார்களை அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதன்பேரில் இதுவரை கிஷோர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3வது புகாரின்பேரிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்திருந்தனர்.

பாய்ந்தது குண்டர் சட்டம்
இந்த நிலையில்தான், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் கிஷோர் சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல், சிறைத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

ரோகிணி புகார்
சினிமா நடிகை ரோகிணியும் கிஷோர் மீது புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிஷோரால் பாதிக்கப்பட்ட பலரும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

பெண் பத்திரிக்கையாளர்கள்
பெண் பத்திரிகையாளர்கள் சிலர் கிஷோர் சாமி மீது ஏற்கனவே வழங்கிய புகார்களுடன் இப்போது வழங்கியுள்ள புகார்களை சேர்த்து பல காவல் நிலையங்களில் விசாரணை ஆரம்பித்துள்ளது. புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில்தான், கிஷோர் சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

1 வருடம் சிறைதான்
சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க கூடிய சூழ்நிலையில் அது தொடர்பாக அவர் தாம்பரம் நீதிமன்றம் ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இப்போது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது என்பதால் 1 ஆண்டு காலம், கிஷோருக்கு ஜாமீன் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்கிறார்கள் சட்டவல்லுனர்கள். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்காவது ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள்.
-
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம்












Click it and Unblock the Notifications