கொடநாடு விவகாரம்: முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை!
கொடநாடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: கொடநாடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். அவர் இதில் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டினார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், கொடநாடு விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். நேர்மையான ஐஜி தலைமையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும். இதற்காக தனி குழு அமைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். முதல்வர் பதவி விலகினால்தான் நேர்மையான விசாரணை நடக்கும். இதற்கு பின் எடப்பாடி பழனிச்சாமி தான் இருந்தார். வெளிப்படையாக அது எல்லோருக்கும் தெரியும்
கனகராஜ் மரணத்தை விபத்து என்று கூறி மறைக்க பார்க்கிறார்கள். கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை. அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இதை தனியாக விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கில் தற்போது ஆதாரங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது. இதனால்தான் சயனையும், மனோஜையும் கைது செய்துள்ளனர். கொடநாடு அலுவலகம் என்பது தனியார் இடமாக இல்லை: அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகமாக செயல்பட்டது.
அதனால் அங்கு ஆவணங்கள் எதனால் திருடப்பட்டது என்று விசாரிக்க வேண்டும்.இது அனைத்திற்கும் பொறுப்பேற்ற முதல்வர் பதவியில் இருந்து பழனிச்சாமி பதவில் விலக வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications