கொடநாடு விவகாரம்: முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை!
கொடநாடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: கொடநாடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். அவர் இதில் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டினார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், கொடநாடு விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். நேர்மையான ஐஜி தலைமையில் புலனாய்வு குழு அமைக்க வேண்டும். இதற்காக தனி குழு அமைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். முதல்வர் பதவி விலகினால்தான் நேர்மையான விசாரணை நடக்கும். இதற்கு பின் எடப்பாடி பழனிச்சாமி தான் இருந்தார். வெளிப்படையாக அது எல்லோருக்கும் தெரியும்
கனகராஜ் மரணத்தை விபத்து என்று கூறி மறைக்க பார்க்கிறார்கள். கனகராஜ் விபத்தில் இறக்கவில்லை. அவர் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இதை தனியாக விசாரிக்க வேண்டும்.
இந்த வழக்கில் தற்போது ஆதாரங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது. இதனால்தான் சயனையும், மனோஜையும் கைது செய்துள்ளனர். கொடநாடு அலுவலகம் என்பது தனியார் இடமாக இல்லை: அது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகமாக செயல்பட்டது.
அதனால் அங்கு ஆவணங்கள் எதனால் திருடப்பட்டது என்று விசாரிக்க வேண்டும்.இது அனைத்திற்கும் பொறுப்பேற்ற முதல்வர் பதவியில் இருந்து பழனிச்சாமி பதவில் விலக வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications