சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை...விரைவில் திறப்பா... பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு!!
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மே 5ஆம் தேதி கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இந்த நிலையில் இந்த சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக கோயம்பேட்டில் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கு முன்னதாக சென்னை பெருநகர வளா்ச்சி குழும அதிகாரிகள் ஆய்வுகளை முடித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா தொற்று பெரிய அளவில் பரவியதை அடுத்து, கடந்த மே மாதம் 5-ஆம் தேதி சந்தை மூடப்பட்டது. புறநகரில் இருக்கும் திருமழிசை பகுதிக்கு தற்காலிகமாக மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மொத்த பழ வியாபாரம் மாதவரம் பேருந்து நிலையத்துக்கும், பூக்களின் மொத்த விற்பனை வானகரம் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன.
திருமழிசைக்கு காய்கறி சந்தையை மாற்றுவதற்கு பெரிய அளவில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். திருமழிசைக்கு காய்கறிகளை கொண்டு செல்வதற்கு தங்களுக்கு வசதி இல்லை என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும், அனைத்து காய்கறி வியாபாரிகளுக்கும் அங்கு இடம் ஒதுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து இருந்தனர். போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்பட்டனர். சந்தைக்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடியாமல் சாலையில், குப்பையில் காய்கறிகளை சில வியாபாரிகள் கொட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் மீண்டும் சந்தையை திறக்க வேண்டும் என்று கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து இருந்தனர். அந்தக் கடிதத்தில், பொதுமக்களின் நலன் கருதி கோயம்பேடு சந்தையை சுத்தம் செய்து மீண்டும் திறக்க வேண்டும். காய்கறி, பூ, பழம், மீன், இறைச்சி சந்தைகளை கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும். உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
அப்போது, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று கோயம்பேடு சந்தையில் சி.எம்.டி.ஏ உறுப்பினா் செயலா் காா்த்திகேயன், அங்காடி நிா்வாக குழு அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோா் ஆய்வு செய்தனா். இதையடுத்து முதலில் காய்கறி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அடுத்த கட்டமாக இன்று துணை முதல்வர் பன்னீர் செல்வம், உயர் அதிகாரிகளுடன் கோயம்பேடு சந்தையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து விரைவில் கோயம்பேடு காய்கறி சந்தை திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications