கொங்கு நாடு என்பது கற்பனை- தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது: கே.எஸ். அழகிரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொங்கு நாடு என்பது கற்பனை; தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Tamilnadu-வை பிரிக்க முடியுமா? Kongu Naadu உருவாவதற்கான சாத்தியங்கள் இருக்கா ?

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான பா.ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ராமச்சந்திரன் உருவப்படத்துக்கு கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    KS Alagiri condemns to create Kongu Nadu State

    இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி கூறியதாவது: தமிழகத்தில் பிரிவினைவாதம் வேண்டாம். வேளாண்துறையில் வளர்ச்சிதான் இங்கு தேவை.

    கொங்கு நாடு என்பது அமையாது; அது ஒரு கற்பனை. தமிழக மக்கள் பிரிவினையை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுதான் தமிழகத்தின் குரல்.

    தமிழர்கள் ஒற்றுமையை தான் என்றும் விரும்புவார்கள் பாஜகவின் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிகளை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தின் வெற்றி என்பது அது பரந்துபட்ட தமிழகமாக இருப்பதால்தான் உள்ளது. இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+