கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதிக்கணும் -கே.எஸ்.அழகிரி
சென்னை: கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.
கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க விடமாட்டேன் என அண்மையில் சீமான் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கே.எஸ்.அழகிரி டி.என்.ஏ.சோதனை கோரியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கருணாநிதியின் நினைவாக பேனாச் சின்னம் அமைப்பதை வரவேற்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

பேனாச் சின்னம்
சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவாக கடலில் ரூ.80 கோடி செலவில் பேனாச் சின்னம் அமைக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் கசிந்தது. தமிழக அரசு சார்பில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் அரசியல் கட்சியினர் மத்தியில் காண முடிந்தது. கருணாநிதிக்கு நினைவிடம் கட்டிக்கொள்வதோடு நின்று கொள்ள வேண்டும், பேனாச் சின்னம் அமைப்பதெல்லாம் சேட்டை நான் விடமாடேன் எனக் கூறியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமானுக்கு பதிலடி
இந்நிலையில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.மேலும், பேனாச் சின்னத்தை பொறுத்தவரை இலக்கிய நயமிக்கது என்றும் ரசனையானது எனவும் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கக் கூடாது என சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கே.எஸ்.அழகிரி டி.என்.ஏ. பரிசோதனை நடத்தக் கோரியிருப்பது கவனிக்கத்தக்கது.

தவறு இல்லை
தன் வாழ்நாள் முழுவதும் எழுதியவர் கருணாநிதி என்றும் தமிழ் மக்களுக்காக உழைத்த ஒருவருக்கு அவரது நினைவாக பேனாச் சின்னம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கருணாநிதியின் நினைவாக பேனாச் சின்னம் அமைப்பதை வரவேற்பதாக அவர் கூறியிருக்கிறார்.
Recommended Video

மரபணு சோதனை
மேலும், கருணாநிதியின் சிலையை வைக்காமல் பேனாவின் சின்னத்தை தானே வைக்கிறார்கள், அதிலென்ன தவறிருக்கிறது என வினவினார். இதனிடையே கருணாநிதிக்கு பேனாச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது யார் மீதோ அவர் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பது புரிகிறது.












Click it and Unblock the Notifications