'குமரி' பேனாக்களை 4 அணாவுக்கு விற்பனை செய்த வசந்தகுமாரின் தொடக்க காலங்கள்... கே.எஸ். ராதாகிருஷ்ணன்
சென்னை: கொரோனாவால் காலமான காங்கிரஸ் லோக்சபா எம்.பி. வசந்தகுமார், இளம்பிராயத்தில் மரத்தால் செய்யப்பட்ட கன்னியாகுமரி பேனாக்களை ஒன்று 4 அணாவுக்கு என விற்பனை செய்த தொடக்க கால வாழ்க்கையை நினைவு கூர்ந்திருக்கிறார் மூத்த வழக்கறிஞரும் முன்னணி சமூக செயற்பாட்டாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
கொரொனாவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வசந்தகுமார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூத்த வழக்கறிஞரும் முன்னணி சமூக செயற்பாட்டாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன், எச். வசந்தகுமார் குறித்து தமது சமூக வலைதளத்தில் எழுதியிருப்பதாவது:
குமரி அனந்தன் சாத்தூர், மதுரையில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். கடந்த 1970இல் இரவு ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களுக்கு அண்ணன் குமரி அனந்தனோடு வசந்தகுமார் வருவார்.
நெடுமாறனுடன் இருக்கும் போது இதை கவனித்துள்ளேன். மரத்தினால் செய்யப்பட்ட குமரி பேனாக்கள் ஒன்று 4 அணாவுக்கு வசந்த குமார் விற்று கொடுத்த அந்தக் கால நினைவுகள்...... அவரது அண்ணன் குமரிஅனந்தனோடு அவர் பேசுகிற பொதுக்கூட்டங்களில் மக்களிடம் பேனா வியாபாரம் செய்து சிறிய அளவில் தொடங்கி மிகப் மிகப் பெரிதாக வளர்ந்து பெரிய தொழிலதிபர் ஆனார்.
கடும் உழைப்பாளி. ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications