உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்குன்னா தக்காளி சட்னியா.. குஷ்பு கோபக் கேள்வி
ரயிலில் அன்று கைப்பற்றப்பட்ட 560 கோடி ரூபாய் யாருடையது என குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: "2 வருஷத்துக்கு முன்னாடி லாரியில் 560 கோடி பிடிச்சாங்களே.. அது என்னாச்சுன்னு, யார் பணம்னு சொன்னாங்களா? உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?" என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
காட்பாடியில் நடந்த சோதனையில் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது என்றும், அந்த பணம் எல்லாம் திமுக பிரமுகர் சீனிவாசன் வீடு, குடோன்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி காலையில் இருந்து பரபரப்பை கிளப்பி வருகிறது.

இன்னும் சோதனையும் தீவிரமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இது சம்பந்தமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தன் கருத்தை சொல்லி உள்ளார்.
அப்போது அவர் சொன்னதாவது: அதிகாரிகள் நடத்தட்டும்.. வேணாம்னு சொல்லலை. கைப்பற்றின பணம் கண்டுபிடிச்சு சொல்லட்டும்.. தப்பில்லை!
ஆனா 2 வருஷத்துக்கு முன்பு லாரியில் 560 கோடி ரூபாய் பிடிச்சாங்களே? அது என்ன ஆச்சு? அந்த பணம் யாருடையது? எங்கே இருந்து வந்தது? இது எதுவுமே இதுவரைக்கும் சொல்லவே இல்லையே.
வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியபோது ஒரு அமைச்சர் எல்லா டாக்குமென்டையும் தூக்கிக்கொண்டு எல்லார் கண் முன்னாடியும் ஓடினாரே.. அந்த ஆவணம் என்ன ஆவணம்? அது யாராவது இதுவரைக்கும் கண்டுபிடிச்சாங்களா?
ஏன் அதை மட்டும் மறைக்கணும்? உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? இந்த விஷயத்தில் எல்லாம் தேர்தல் கமிஷன் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications