விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு!
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தொழில்துறையில் சுமார் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் (MoU) கையெழுத்திட்டு அசத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பெரும் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று கையெழுத்தானது.

முதலீடு
இந்த ஒப்பந்தத்தின் மூலம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மொத்தம் 18,600 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய டேட்டா சென்டர் திட்டம், கோயம்புத்தூரில் 2,500 கோடி ரூபாய் மதிப்பில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள ஷிப்யார்டை விரிவுபடுத்த 1,100 கோடி ரூபாய் முதலீடு ஆகியவை அடங்கும்.
இதில் டேட்டா சென்டர் மற்றும் கப்பல் கட்டுமான திட்டங்கள் தொடர்பான முதலீடுகள், ஏற்கனவே இயங்கி வந்த தளத்தில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக கூடுதலாக முதலீடு செய்யப்படுகிறது.
வேலைவாய்ப்பு உருவாக்கம்
இந்த மூன்று திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் சுமார் 8,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காட்டுப்பள்ளி ஷிப்யார்டு விரிவாக்கம் மூலம் 5,700 பேரும், கோயம்புத்தூர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொழிற்சாலை மூலம் 2,000 பேரும், காஞ்சிபுரம் டேட்டா சென்டர் மூலம் 500 பேரும் பயனடைய உள்ளனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி
இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உயர் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மற்றும் கப்பல் கட்டுமானத் துறைகளில் மாநிலத்தின் நிலையை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் 2036-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் முதல்வர் விஜயின் இலக்கை எட்ட உதவும் என்றும் கூறப்படுகிறது.
ஆனா, இது போதாது
இருப்பினும், உலகளாவிய தொழில் சந்தையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டுமானால், வரும் காலங்களில் உலகளாவிய திறன் மையங்கள் (GCC - Global Capability Centres) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) துறைகள் மீது அரசு கூடுதல் மற்றும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
விஜய் தலைமையிலான அரசு
வழக்கமாக ஒரு புதிய அரசு அமைந்து, இலாகாக்கள் பிரிக்கப்பட்டு, தொழில் முதலீடுகளை ஈர்க்க சில காலம் தேவைப்படும். ஆனால், வந்த வேகத்திலேயே எல்&டி (L&T) போன்ற ஒரு கார்ப்பரேட் ஜாம்பவானை சென்னைக்கு வரவழைத்து 'டீல்' முடித்துள்ள நிலையில் முதல்வரை பாராட்டியாக வேண்டும்.
வெறும் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல், எதிர்காலத் தேவைகளான 'டேட்டா சென்டர்' மற்றும் 'எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி' ஆகியவற்றைக் கையில் எடுத்து, 8,200 இளைஞர்களுக்கு நேரடியாக உயர்தர வேலைவாய்ப்புகளை எப்படிப் பிய்த்துத் தரப்போகிறது.
மாநிலத்தின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த உயர் தொழில்நுட்ப, கப்பல் கட்டுமான முதலீடுகள் எந்த அளவுக்கு ஒரு 'கேம் சேஞ்சராக' (Game Changer) இருக்கப்போகிறது.
உயர்தர வேலைவாய்ப்புகள்
இது போன்ற உயர்தொழில்நுட்பத் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமே, தமிழகத்தின் 2 மற்றும் 3-ஆம் கட்ட நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு நவீன மற்றும் சர்வதேச அளவிலான உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
இந்த MoU மூலம் தமிழ்நாடு அரசு தனது தொழில் நட்பு சூழலை மேலும் வலுப்படுத்தியுள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ போன்ற பெரிய நிறுவனங்கள் மாநிலத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முதலீடுகள் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!












Click it and Unblock the Notifications