நில அளவீடு.. பட்டா மாறுதலில் இனிமே நிம்மதி.. வரப்போகிறது "தனி மையம்".. நில அளவை துறை இப்படி அசத்துதே
சென்னை: பட்டா மாறுதல், நில அளவை பணிகளின் சேவைகளில் தரத்தை உறுதி செய்வதற்காக புதிய வசதி ஒன்று ஏற்படுத்த போவதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன?
சமீபத்தில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது.

சேவைகள்: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு (F-line application) செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி வைத்திருந்தார்.
இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய 'எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்ல தேவையில்லை.. மாறாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மெசேஜ்: இதன்மூலம் நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கும் மெசேஜ் அல்லது போன் மூலமாக தெரிவிக்கப்படும்... நிலஅளவை செய்யப்பட்டதுமே, மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் போன்றவற்றை https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த புதிய சேவையானது மக்களின் நம்பிக்கையை அபரிமிதமாகவே பெற்று வருகிறது. எனினும், தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், பட்டாக்களை பெறுவதற்காக அதிகமாகவே விண்ணப்பிக்கின்றனர். இதை எளிமைப்படுத்தவும், பொது மக்களுக்கு ஏற்படும் அலைக்கழிப்பை குறைப்பதற்காகவும், இன்னும் ஏராளமான அதிரடிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
அந்தவகையில், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தை மேம்படுத்த வேண்டி அவசியமும் எழுந்துள்ளது. ஏனென்றால் நிறைய இடங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில், பிழைகள் வருகிறதாம்.. இதுபோன்ற பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தாலும், அதன் மீது, சில அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லையாம்.
பிழைகள்: அதனால்தான், இந்த பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க அரசு முடிவெடுத்துள்ளது.. இதற்காகவே, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.
இது குறித்து, நில அளவை துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக பதிவிட வேண்டும். மேலும், நில அளவை வரைபட விற்பனை உள்ளிட்ட சேவைகளில் தரத்தை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான்
ஆன்லைன் வசதி: இதற்காகவே, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில், நில அளவை துறை வளாகத்தில், மையம் அமைக்கப்படும். இதன்மூலம், நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, ஆன்லைனிலேயே உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்படும்" என்கிறார்கள்.
இந்த வசதி மட்டும் கொண்டுவரப்பட்டால் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில், பிழைகள் ஏற்படுவது விரைவாக சர்செய்யப்பட்டு விடும் என்றே நம்பப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications