நிதிஷ்குமார் முதல்வர் பதவி காலி.. ஆரம்பித்த பாஜக! அதிமுகவுக்கு அச்சம்.. எடப்பாடிக்கும் இதே கதி தானா!
சென்னை: பீகாரில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து ஒதுங்கும் நிலையில், அங்கு நேரடியாக பாஜக கண்ட்ரோலை எடுக்கிறது. இதற்கிடையே இன்று பீகாரில் நடப்பதைப் போன்ற சம்பவம் நாளை தமிழ்நாட்டிலும் கூட நடக்கலாம் என்றும்.. எடப்பாடிக்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த ஒருவரே கூட முதல்வர் பதவிக்கு வரலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய ஒரு அரசியல் மாற்றம் நடந்துள்ளது. அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பீகார் முதல்வராகப் பணியாற்றிய நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். நேற்றே இது தொடர்பான தகவல் வெளியான போதிலும், இன்று தான் நிதிஷ் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் அவர் பீகார் அரசியலில் இருந்து ஒதுங்குவது உறுதியாகியுள்ளது.

நிதிஷ் குமார்
நாடாளுமன்றத்தின் இரு அவைகள், மாநில சட்டமன்றத்தின் இரு அவைகள் என அனைத்திலும் உறுப்பினராக வேண்டும் என்பது தனது நீண்டநாள் விருப்பம் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நிதிஷ் குமார் ஏற்கனவே லோக்சபா உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ள நிலையில், இப்போது ராஜ்சயாவிலும் உறுப்பினராவதன் மூலம் தனது கனவை நிறைவேற்றுகிறார். மேலும், இதுநாள் வரை தன்னை நம்பி ஆதரவளித்தோருக்கு நன்றி என்றும் பதிவிட்டிருந்தார்.
பீகார்
பீகார் சட்டசபையைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 243 சீட்கள் உள்ளன. அதில் பாஜகவுக்கு 89 இடங்களும், நிதிஷ் கட்சிக்கு 85 இடங்களும் உள்ளன. பாஜகவே அங்கு தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட தேர்தலுக்குப் பிறகு அவரே முதல்வராகத் தொடர்ந்தார். இந்தச் சூழலில் தான் நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நிதிஷ் முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பாஜகவில் இருந்து நேரடியாக ஒருவர் முதல்வராக வருவார் எனத் தெரிகிறது. நிதிஷ் மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
நிதிஷ் குமாரின் இந்த முடிவு பல்வேறு கேள்விகளை அரசியல் அரங்கில் எழுப்புகிறது. பீகார் தேர்தலுக்கு முன்பே, முதல்வர் வேட்பாளர் தொடர்பான சலசலப்பு என்டிஏ கூட்டணியில் நிலவியது. இது வாக்காளர்கள் குழப்பிய நிலையில், தேர்தல் நெருங்கும்போது தான் நிதிஷ் குமார் முதல்வராகத் தொடர்வார் என அறிவித்தார் அமித் ஷா! அதன் பிறகே பீகாரில் என்டிஏ அலை தெளிவாக வீச ஆரம்பித்தது. ஆனால், 5 மாதங்கள் கூட ஆகாத நிலையில், நிதிஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக
இதற்கிடையே நிதிஷுக்கு நேர்ந்தது நாளை எடப்பாடிக்கும் கூட நேரலாம் என்று நெட்டிசன்கள் சிலர் சொல்லி வருகிறார்கள். பீகாரிலாவது நிதிஷ் தான் முதல்வர் என்பதை அமித் ஷா அறிவித்தார். ஆனால், இங்கு என்ன தான் அதிமுக தலைவர்கள், அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைக்கும் எனச் சொன்னாலும் பாஜக தலைவர்கள் கடைசி வரை என்டிஏ அரசு அமையும் என்றே சொல்கிறார்கள். என்டிஏ கூட்டங்களில் பிரதமர் மோடி அதிமுக என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்துவதில்லை.
எடப்பாடிக்கு ஆபத்து
மேலும், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கூட சீக்கிரமே அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்றே சாடி வருகிறார்கள். நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ள சூழலில்.. அடுத்து 5 ஆண்டுகளில் அதிமுகவே இருக்காது என்றும் அவர் கடுமையாகச் சாடினார். இப்படி பலரும் இதையே சொல்லி வரும் சூழலில், சரியாகப் பீகாரிலும் பாஜக நேரடியாக இப்படி கண்ட்ரோலை எடுத்துள்ளது.
இதனால் தேர்தல் முடிந்து ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தாலும் கூட எடப்பாடி எவ்வளவு காலம் முதல்வராகத் தொடர்வார் என்பது கேள்வி தான் என்கிறார்கள். நிதிஷுக்கு நேர்ந்த கதி நாளை அதிமுக ஆட்சியில் எடப்பாடிக்கும் ஏற்படலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்!
-
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்!












Click it and Unblock the Notifications