லாக்டவுன் 6.0: பரபரப்பாக காணப்பட்ட திருமழிசை தற்காலிக சந்தை நடமாட்டமின்றி வெறிச்சோடியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடுக்கு பதிலாக பரபரப்புடன் இயங்கி வந்த திருமழிசை தற்காலிக சந்தை புதிய லாக்டவுனால் வெறிச்சோடி கிடக்கிறது.

Recommended Video

    பரபரப்பாக காணப்பட்ட திருமழிசை தற்காலிக சந்தை நடமாட்டமின்றி வெறிச்சோடியது!

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 12 நாட்கள் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மற்றும் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி அனைத்து கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

    திருமழிசை சந்தைக்கு விடுமுறை

    திருமழிசை சந்தைக்கு விடுமுறை

    இதனால் அந்த இரு நாட்களில் தற்காலிக காய்கறி சந்தையான திருமழிசை சந்தை இயங்காது என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜசேகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி எப்போதும் இரவு முதல் காலை வரை பரபரப்புடன் காணப்படும் திருமழிசை சந்தை சனிக்கிழமை இரவு முதல் இன்று காலை வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

    வெறிச்சோடிய சந்தை

    வெறிச்சோடிய சந்தை

    இன்றைய தினத்தில் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் எதுவும் வரவில்லை. வியாபாரிகளும் யாரும் வரததால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் திருமழிசை தற்காலிக சந்தை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கால் பல்வேறு இடங்களில் காய்கறி கடைகள் திறக்கப்படாமல் இருப்பதால் கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகள் டன் கணக்கில் தேக்கம் அடைந்தது .

    பொதுமக்களின் சுய லாக்டவுன்

    பொதுமக்களின் சுய லாக்டவுன்

    இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த கரூர் பகுதி வர்த்தக சங்கத்தினர் தாங்களாகவே சுய லாக்டவுனை அறிவித்து கடைகளை அடைத்துள்ளனர். கரூர் கிராமபகுதியானது புதுக்கோட்டை- சிவகங்கை மாவட்டங்களின் எல்லை பகுதியாகும். கரூரிலிருந்து சுமார் 3கிலோமீட்டர் தூரமான சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியைச் சேர்ந்த சிறுகானூர், அண்டனூர் ஆகிய கிராம பகுதியில் இருவருக்கு கரோனா தெற்று உறுதியானது. இவர்கள் சிவகங்கை மாவட்ட மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    5 நாட்கள் லாக்டவுன்

    5 நாட்கள் லாக்டவுன்

    தொற்று பாதித்த பகுதி கரூர் கிராமத்திற்கு நடந்து வரும் தூர பகுதி கிராமம் என்பதால் அப்பகுதி அடைக்கபட்டுள்ளது. மேலும் யாருக்கும் தெற்று பரவாமல் தடுப்பதற்காக கரூர் வர்த்தக சங்கத்தினர் ஒரு மனதாக முடிவு செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு சுய ஊரடங்கு அறிவித்து கடையடைப்பு செய்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+