நோ கட்டிங்.. நோ ஷேவிங்.. சலூன் கடைகள் திறக்க தடை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது
சென்னை: பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதாக உத்தேச ஒன்று தகவல் வெளியான நிலையில், தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கொரோனாவைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மேலும் 2 வாரம் லாக்டவுனை மத்திய அரசு நீட்டித்துள்ளது.. இதற்கான தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்தும் விலாவரியாக அரசு தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.

அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளர்வுகளில் ஒன்று சலூன் கடைகள் திறப்புதான்.. ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக சலூன் கடைகள் திறக்கப்படவில்லை.. ஆண்கள் கட்டிங், ஷேவிங் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
முடிந்தவரை வீடுகளில் இருப்பவர்கள் இதற்கு உதவினாலும் பெரும்பாலானோர் ஷேவிங் செய்ய முடியாமலும், முடி வெட்ட முடியாமலும் தாடி மீசையை டிரிம் செய்ய முடியாமலும், தலைக்கு டை அடிக்க முடியாமலும் பெரிதும் அவதிக்குள்ளாயினர்... முடிகள் வளர்ந்து தொங்கியது.. பரட்டை தலையாக பலர் காணப்பட்டனர்.. ஷேவிங் செய்யப்படாமல் புதர்போல தாடி வளர்ந்து காணப்பட்டது.
கோயம்பேட்டில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர், கடையை திறந்து வைத்து கொண்டு கட்டிங், ஷேவிங் என இறங்கிவிட, அவருக்கு தொற்று உறுதியானதும் இந்த இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்தது.. கடைக்கு தினமும் கஸ்டமர்கள் வருவதுடன், குறைந்தது 20 வீடுகளுக்கு சென்றாவது கடை ஓனர் கட்டிங், ஷேவிங் செய்து வந்ததால் உச்சக்கட்ட பீதிக்கு சென்றது கோயம்பேடு!!!
பெரும்பாலான சவரத் தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்தனர்.. அரசும் எந்த இவர்களுக்கு எந்த பொருளாதார உதவியையும் செய்யவில்லை.. அதனால் 2 நாளைக்கு முன்பு கூட முடிதிருத்துவோர் நலசங்கத்தினர் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர்.
" சலூன் கடைகளை வாரத்தில் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். மாஸ்க், கிளவுஸ் அணிந்து நாங்கள் பணிபுரிய தயாராக உள்ளோம். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதாக ஒரு தகவல் கசிந்தது.. எனினும் அது உறுதிப்படுத்தப்படாமலேயே இருந்தது!!
ஒருவேளை இந்த அறிவிப்பு உண்மையானால், அது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம்? தொற்று பரவல் இல்லாமல் கட்டிங், ஷேவிங் செய்யப்படுமா? இதில் சமூக விலகல் முழுதுமாக கடைப்பிடிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்தது.. அதனால் நிச்சயம் அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்றும் கோரிக்கைகளும் எழுந்தன.
ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.. அதன்படி சலூன் கடைகள் இயங்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.. கொரோனாவிடம் சிக்கியுள்ள சென்னையிலும் தனிக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளுக்கு தடை விதித்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications