Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாக்டவுன்: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே பயணிக்க இன்று முதல் இ பதிவு கட்டாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்கவும் மாவட்டங்களை விட்டு வெளியே செல்லவும் இன்று முதல் இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 2 வார லாக்டவுன் அமல்படுத்தபட்டுள்ளது. தொடக்கத்தில் சில நாட்கள் இருந்த தளர்வுகள் தற்போது முழுமையாக கைவிடப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த லாக்டவுன் வரும் 24-ந் தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தில் ஏற்கனவே வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் http://eregister.tnega.org என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Lockdown: TN Govt imposes E-pass and E Registration from today

தற்போது, திருமணம், உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால் இ-பாஸ் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இ பதிவு மட்டும் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் http://eregister.tnega.org பதிவு செய்து அதற்கான ஆவணம் வைத்திருந்தாலே போதும்; அதிகாரிகள் ஒப்புதல் தேவை இல்லை என்பதுதான் இ பதிவு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+