இனி ‛ராஜ் பவன்’ கிடையாது.. ஆளுநர் மாளிகை பெயரை மாற்றிய மத்திய அரசு.. ஆர்என் ரவியின் கோரிக்கை ஏற்பு
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்' பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் பெயரை ‛மக்கள் பவன்' என மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விருப்பம் தெரிவித்து இருந்தார். இதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்ற நிலையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ‛ராஜ்பவன்' பெயர்கள் ‛லோக்பவன்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லோக்பவன் என்பதற்கு மக்கள் பவன் என்று பொருள். இந்த பெயர் மாற்றத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்,
நம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் ஆளுநர் மாளிகைகள் ‛ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுநர்களின் மாளிகை ‛ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ‛ராஜ் பவன்' என்ற பெயரில் உள்ளது. தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இந்நிலையில் தான் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆர்என் ரவி கூறி வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆளுநர் மாளிகையை ராஜ்பவன் என அழைப்பது சரியானது இல்லை. நான் ராஜாவும் கிடையாது. அது ராஜாவின் பவனும் கிடையாது. இது மக்களுக்கான அலுவலகமாக இருக்க வேண்டும். மக்களுக்காக ஆளுநர் சேவையாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஆளுநர்களின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள், அனைத்து யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றனர். அப்போது ஆளுநர் அலுவலகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், மக்களின் நலனுக்கான பல்வேறு யோசனைகளையும் ஆளுநர்கள் முன்வைத்தனர். இந்த மாநாட்டில் ஆர்என் ரவி பேசும்போது, ராஜ் பவன் பெயரை மக்கள் பவன் என மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, அதற்கான பரிந்துரையையும் வழங்கியிருந்தார்.
இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது ஏற்று கொண்டுள்ளது. இதுதொடர்பாக நவம்பர்25 அன்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாகப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இதில் ‛லோக் பவன்' என்பது தமிழில் ‛மக்கள் பவன்' என்று பொருள்படும்..
இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதல் முதலாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகையின் பெயர் ‛லோக் பவன்' என்று மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள் தமிழக ஆளுநர் மாளிகையின் பெயரும் ‛மக்கள் பவன்' (லோக் பவன்) என மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆளுநர் ஆர்என் ரவியின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications