தமிழகத்தை மொத்தமாக அள்ளும் திமுக கூட்டணி! அதிமுக - பாஜகவுக்கு புது கருத்து கணிப்பில் ஆறுதல்.. என்ன?
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் அதிக இடங்களில் வெல்லும் எனவும், அதிமுக, பாஜகவுக்கு ஆறுதல் வெற்றி மட்டுமே கிடைக்கும் என புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளது. ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை மேற்கொண்டு வரும் Election Forecast அமைப்பு சார்பில் தமிழகத்தில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன். அதன்படி மீண்டும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் அதிக இடங்களில் வெல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 37 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்திலும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தேனியை தவிர்த்து மீதமுள்ள 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் கடந்த முறையை விட ஒரு தொகுதி குறைவாக திமுகவுக்கு கிடைக்கலாம் என Election Forecast கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications