நாங்கள் பாண்டவர்கள்.. கவுரவர்களை தோற்கடிப்போம்.. ஜெயக்குமார் சபதம்
சென்னை: குருசேத்திரப் போர் போன்ற மக்களவை தேர்தலில், பாண்டவர்களான தாங்கள் கவுரவர்களை தோற்கடிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் அளிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே டார்ச்லைட் வெளிச்சம் தரும் என்று விமர்சித்தார்.
ஆனால் அதிமுக, கலங்கரை விளக்கம் போல் உலகிற்கே வெளிச்சம் தரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இன்று இரவுக்குள் நல்ல செய்தி வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நோ நோ.. 21 தொகுதியில் போட்டியில்லை.. லோக்சபா தேர்தலில் ஆதரவு இல்லை.. ரஜினி அறிவிப்பு!
தமிழகத்திற்கு ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலுடன் 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்காது என்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.