Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரிஜினல் பத்திரம் தொலைஞ்சு போச்சா? நகல் பத்திரத்தில் சொத்து வாங்கறீங்களா? வில்லங்கம் மட்டும் கூடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து நமக்குரியது என்பதை நிரூபிக்கக்கூடிய மிக முக்கியமான ஆதாரம் ஆவணங்கள்தான்.. அந்த ஆவணங்களில் பெயர், விவரம் அல்லது எல்லை தொடர்பான ஏதேனும் பிழை இருந்தால், நமது உரிமையே கேள்விக்குறியாக மாறும் அபாயம் உள்ளது.. அதனால் அசல் ஆவணங்களான பட்டா, பத்திரப்பதிவு அல்லது பிற அரசு சான்றிதழ்களில் பிழைகள் இருந்தால், அவற்றை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுகுவது மிகவும் அவசியமாகும்.

ஆவணங்களில் உள்ள பிழைகளை தாமதிக்காமல் சரிசெய்வது, எதிர்காலத்தில் சொத்து விற்பனை அல்லது வாரிசுரிமை மாற்றத்தின் போது தேவையற்ற சிக்கல்கள் மற்றும் அலைச்சல்களைத் தவிர்க்க உதவும்..

Property Documents

நகல் பத்திரங்கள்

எப்போதுமே நாம் வாங்கும் சொத்தின் அனைத்து விவரங்களையும் அதன் மூலப் பத்திரத்தின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.. சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்த ஒப்பந்த விவரங்கள், ஒப்பந்த தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தன்மை போன்ற கிரயப் பத்திரம், கடன் பத்திரம், ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்ட அனைத்தும் இதில் இடம்பெறும்..

அதுமட்டுமல்லாமல் சொத்தின் மதிப்பு, சொத்தை வழங்குபவர் மற்றும் வாங்குபவர் பெயர், பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண் போன்ற முக்கிய தகவல்களும் இதில் இருக்கும்.. அந்தச் சொத்து அடமானமாக வைத்து கடன் எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது பவர் ஆஃப் அட்டார்னி வழங்கப்பட்டிருந்தாலோ, அவற்றையும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் அறிந்து கொள்ள முடியும்..

சில நேரங்களில் அசல் ஆவணம் இல்லாமல் நகல் ஆவணங்களை வைத்து சொத்தை விற்க முயற்சிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில் நகல் ஆவணங்களை மட்டும் வைத்து எந்த முடிவும் எடுக்கக் கூடாது..

ஒரிஜினல் பத்திரம் - அசல் ஆவணங்கள்

அசல் ஆவணம் உண்மையிலேயே தொலைந்ததா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.. ஏனெனில் சில தகவல்கள் வில்லங்கச் சான்றிதழில் கூட இடம்பெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது.. குறிப்பாக, அசல் ஆவணங்களை வங்கியில் வைத்து கடன் எடுத்திருக்கலாம் என்பதால், அந்த விவரங்களையும் தெளிவாக சரிபார்ப்பது மிகவும் அவசியமாகிறது..

மேலும், சொத்தை விற்பவர் வழங்கும் ஆவணங்களையும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் நகல் ஆவணங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.. இரண்டிலும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும்.. குறிப்பாக சர்வே எண் மற்றும் பதிவு விவரங்கள் போன்ற முக்கிய அம்சங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்..

நிலம் சொத்துக்கள்

அதேபோல பத்திரத்தில் உள்ள கையொப்பங்களையும் கவனமாக சரிபார்ப்பது மிகவும் அவசியம்.. ஏனெனில் சில நேரங்களில் முழு ஆவணமே போலியாக இருக்கக்கூடிய அபாயமும் உள்ளது.

நிலம் வாங்கியதற்கு பத்திரங்கள் எழுதப்படும்.. இந்த பத்திரங்களில் எழுத்துப்பிழைகள் இருந்தால் அதை உடனே திருத்தி கொள்ள வேண்டும்.. இதனை பிழை திருத்தல் பத்திரம் மூலம் சரிசெய்ய முடியும்..

இது பெரிய சட்ட சிக்கல்களை உருவாக்காததாக இருந்தாலும், ஏற்கனவே பதிவு செய்த அதே நபர்கள் முன்னிலையில் இந்த திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.. ஒருவேளை நிலத்தின் அளவு அல்லது உரிமையில் பெரிய மாற்றங்கள் இருந்தால், புதிய திருத்த பத்திரம் பதிவு செய்யப்பட்டு, அது வில்லங்க சான்றிதழில் சரியாக பிரதிபலிக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்..

நத்தம் நில வரித் திட்ட பிழைகள்

வருவாய்த்துறை ஆவணங்களான பட்டா, சிட்டா போன்றவற்றில் பிழைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை அணுக வேண்டும்.. தற்போது ஆன்லைன் மூலமாகவும் இத்தகைய திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது..

நத்தம் நிலவரித் திட்டப் பிழைகள் அல்லது நில அளவை தொடர்பான முரண்பாடுகளைச் சரிசெய்ய முறையான ஆதாரங்களுடன் மனு அளிக்க வேண்டும்.. ஆவணங்களில் உள்ள சிறு பிழையைக்கூட அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் சரிசெய்வது, வருங்காலத்தில் வாரிசுரிமை மாற்றங்கள் அல்லது அவசரத் தேவைக்குச் சொத்தை விற்பனை செய்யும்போது ஏற்படும் தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+