உயரே எகிறும் மின்கட்டணம்.. சட்டென மின்வாரியம் எடுத்த முடிவு.. இனி கரண்ட் பில் இப்படித்தானாம்.. அதிரடி
சென்னை: தமிழக மின்சார வாரியம் அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இதனால், பொதுமக்களுக்கு ஒருவித நிம்மதி பிறந்துள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காக, தமிழக மின்துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்தவகையில், மின்சார வழங்கல் விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை செய்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2 நாட்களுக்கு முன்புகூட ஒரு புதிய உத்தரவை பிறப்பித்திருந்தது.

மின்மாற்றிகள்: வழக்கமாக, புதிய மின் இணைப்புகள் வேண்டுமானால், 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.. இவைகளில், மின்கம்பம் இணைப்பு என்றால் 60 நாட்களுக்குள்ளும், 90 நாட்களுக்குள் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இனிமேல், இந்த அளவுக்கு கால அவகாசம் கிடையாதாம்.. புதிய மின் இணைப்புகளை 7 நாட்களுக்குள்ளாகவே வழங்க வேண்டும் என்றும், மீட்டர் பொருத்தாமல் புதிய மின் இணைப்புகளை வழங்கக்கூடாது மற்றும் மின்சார வழங்கல் விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை செய்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
என்ன காரணம்: இதற்கு காரணம், தற்போது, புதிய மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே மொத்தம் 2 லட்சத்துக்கும் மேல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.. நாளுக்கு நாள் புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், 7 நாட்களுக்குள்ளாகவே புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், பொருத்தாமல் புதிய மின் இணைப்புகளை வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது..
இந்நிலையில், டிரான்ஸ்பார்கள் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, விவசாயத்துக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தில் மின்இழப்பு, மின்தடை ஏற்படுவதை தடுப்பதற்காகவே, குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை நிறுவ மின்வாரியம் முடிவு செய்துள்ளதாம்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சொல்லும்போது, "பொதுவாக, வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிற்சாலைகளுக்கு500கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.. ஒரு மின்மாற்றியில் குறைந்தபட்சம் 500 இணைப்புகள் தரப்படுகின்றன. இதனால், மின்விநியோகத்தில், குறிப்பாக விவசாயத்துக்கான மின்விநியோகத்தின்போது மின்இழப்பு ஏற்படுவதோடு, அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது.
மின்மாற்றிகள்: இதற்கெல்லாம் காரணம், அதிக திறன் கொண்டமின்மாற்றிகளை பயன்படுத்துவதுதான்.. இப்போது, 63 கிலோவாட், 100 கிலோவாட், 250கிலோவாட், 500 கிலோவாட் திறன்கொண்ட 4.07 லட்சம் மின்மாற்றிகள் உள்ளதால், தமிழக மின் வாரியத்தின் மின்இழப்பு 13 சதவீதமாக இருக்கிறது..
ஆனால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 4 கிலோவாட், 10 கிலோவாட் என குறைந்த திறன்கொண்ட மின்மாற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.. அதுபோலவே, நம்முடைய தமிழகத்திலும், 16 கிலோ வாட், 25 கிலோவாட் என குறைந்த திறன் கொண்டமின்மாற்றிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்மாற்றிகளின் திறனை குறைப்பதால், மின்இழப்பு 10 சதவீதமாக குறையும்.
டபுள் குஷி: அதுமட்டுமல்ல, 500 கிலோவாட் மின்மாற்றியை நிறுவ ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. குறைந்த திறன் மின்மாற்றிகளை நிறுவுவதால் செலவும் மிச்சமாகும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். மின்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications