எல்பிஜி வாடிக்கையாளர்கள் கேஒய்சி சமர்ப்பிக்க மார்ச் 31 கடைசியா? மீறினால் சிலிண்டர் நிறுத்தப்படுமா?
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வரும் மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என சமூகவலைதளங்களில் பரவும் செய்திக்கு எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் (இன்டேன்), பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டரை பெறும் வாடிக்கையாளர்களின் விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் சேகரிக்கின்றன. இவை ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதற்கான இறுதிநாள் வரும் மார்ச் 31 என சொல்லப்படுகிறது. மேலும் இந்த நாளுக்குள் தங்கள் விவரங்களை தங்கள் கேஸ் ஏஜென்சிகளிடம் சென்று தெரிவிக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியும் மெசேஜ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களிடம் கேட்ட போது தமிழகத்தில் 2.10 கோடி சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
அவர்கள் உண்மையான வாடிக்கையாளர்களா என்பதை அறிய வேண்டி உள்ளது. போலிகளை கண்டறிந்து கையும் களவுமாக பிடிப்பதற்காகவே வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆன்லைன் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று ஆதார் கார்டு பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பித்துவிட வேண்டும். அப்போது வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். ஒரு வேளை கேஸ் ஏஜென்சிகளுக்கு நேரில் செல்ல முடியாத வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே ஏஜென்சி ஊழியர்கள் சென்று விவரங்களை சேகரித்துவிடுவார்கள்.
எனவே இதற்கெல்லாம் இதுவரை எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. எனவே சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களை நம்பாதீர்கள் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஒரு எச்சரிக்கையும் எஸ்எம்எஸ் மூலம் வருகிறது. அதில் உங்கள் கேஸ் மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் அட்டையுடன் கேஸ் ஏஜென்சிக்கு வந்து பதிவு செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சிலிண்டர் பதிவு நிறுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.
-
LPG தட்டுப்பாடு: எரிவாயு சிலிண்டர் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க.. தவெக விஜய் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
வீட்டுக்கு போடும் கேஸ் சிலிண்டர் விலையில் வரிகள்.. விநியோகிஸ்தருக்கு எவ்வளவு.. எக்ஸ்ட்ரா 50 ஏன்? -
இரவோடு இரவாக மாறிய ரூல்ஸ்.. சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு பெரிய ட்விஸ்ட்.. 2 முறை மாற்றம் -
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம்.. தமிழக அரசு வழங்குமா.. அன்புமணி வலியுறுத்தல் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
கேஸ் தட்டுப்பாடு! கோவையில் அடுப்பே இல்லாமல் 2000 டிஷ்! தேங்காயில் தயிர்! படையல் சிவா அசத்தல் -
சமையல் எரிவாயு தட்டுப்பாடு.. அடுப்பில்லாமல் வீட்டிலேயே அற்புதமான உணவுகளை செய்வது எப்படி -
பெங்களூரில் சிலிண்டர் தட்டுப்பாடு! இன்று முதல் ஹோட்டல்கள் மூடல்! பேச்சுலர்களின் நிலை என்ன? -
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய ஆயில் நிறுவனங்கள்..3க்கு மட்டுமே முன்னுரிமை! ஹோட்டல்காரங்களுக்கு ஆப்பு! -
நானே கேஸ் டீலர்.. சிலிண்டர் தட்டுப்பாடு பச்சை பொய்.. நயினார் நாகேந்திரன் தடாலடி -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை












Click it and Unblock the Notifications