இரவோடு இரவாக மாறிய ரூல்ஸ்.. சமையல் கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு பெரிய ட்விஸ்ட்.. 2 முறை மாற்றம்
சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் முன்பதிவு விதிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது: மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி காரணமாக காத்திருப்பு காலம் 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் சமையல் எரிவாயுவை பதுக்குவதைத் தவிர்க்கவும், அனைவருக்கும் சமமாக எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யவும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மறுமுறை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலத்தை நேற்று 15ல் இருந்து 21 நாட்களாக உயர்த்தப்பட்டதை, இரவோடு இரவாக 25 நாட்களாக அரசு உயர்த்தியுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசலுக்கு வளைகுடா நாடுகளையே சார்ந்துள்ளது. தற்போது வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், எல்லாமே தடைபட்டுள்ளது. ஹார்மூஸ் முனையை ஈரான் மூடியதே எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

25 நாட்களாக உயர்வு
உலகத்தின் எரிவாயு விநியோகத்தின் இதயத்திலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மொத்த உலகமும் கச்சா எண்ணெய் கிடைக்காமல் அல்லாடுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் தொடரும் வரை தட்டுப்பாடு இருக்கும் என்பதால், இந்தியாவில் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மறுமுறை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலத்தை 25 நாட்களாக உயர்த்தி உள்ளது.
130 டாலர் விதி
அரசு வட்டாரங்கள் இது தொடர்பாக கூறும் போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 130 டாலரைத் தாண்டாத வரை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 100 டாலர் அளவிலேயே நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி
நாட்டின் எந்தப் பகுதியிலும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும், விநியோகம் சீராக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஏற்படும் விநியோகத் தடைகளைத் தவிர்க்க, இந்தியா மாற்றுப் பாதைகள் மூலம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை வேகப்படுத்தியுள்ளது.
நெருக்கடியை சமாளிக்கிறோம்
நாட்டில் போதுமான அளவு விமான எரிபொருள் இருப்பு உள்ளது. இந்தியா விமான எரிபொருளை உற்பத்தி செய்வதோடு ஏற்றுமதியும் செய்வதால், இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. இந்தியாவின் எரிபொருள் இருப்பு மற்றும் விநியோகத் தயார்நிலை குறித்து அறிந்துகொள்ள பல நாடுகள் இந்தியாவை தொடர்பு கொண்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு விளக்கம்
இதனிடையே பெட்ரோலிய துறை அமைச்சர் நேற்று இரவு வெளியிட்ட பதிவில் கூறுகையில், "தற்போதைய புவிசார் அரசியல் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கவும், அந்த கூடுதல் உற்பத்தியை உள்நாட்டு சமையல் எரிவாயு பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓட்டல்களுக்கு கிடைக்குமா
வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்துள்ள மத்திய அரசு, எரிவாயு பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தவிர்க்க இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடைப்பட்ட காலத்தை 25 நாட்களாக மாற்றியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எல்பிஜி எரிவாயு மூலம் கிடைக்கும் வணிக ரீதியிலான விநியோகத்தில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய பொதுத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் இதர தொழிற்சாலைகளுக்கு எல்பிஜி விநியோகம் செய்வது தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய, எண்ணெய் நிறுவனங்களின் மூன்று செயல் இயக்குநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
வீட்டு சிலிண்டர் 14.2 கிலோவுக்கு பதில் இனி 10 கிலோ.. மொத்தமாக மாறப்போகுதா.. மத்திய அரசு விளக்கம் -
சவால்களுக்கு தயாராக வேண்டும்.. நீண்ட காலத்திற்கு தாக்கம் இருக்கும்.. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேச்சு -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications