தமிழ்நாட்டை முன்னெடுத்துச் செல்லும் முத்திரைத் திட்டங்கள்.. நிதிநிலை அறிக்கைக்கு வைரமுத்து பாராட்டு
சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தமிழ்நாட்டை முன்னெடுத்துச் செல்லும் முத்திரைத் திட்டங்கள் என கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் செம்மொழி விருது, கீழடி அருங்காட்சியம், தொல்லியல் துறைக்கு ரூ5 கோடி நிதி ஒதுக்கீடு என ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிதிநிலை அறிக்கையை பாராட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:
தேர்தல் அறிக்கையில் சொன்னதும்
அதில் சொல்லாத நல்லதும்
நிதிநிலை அறிக்கையில்
நிறைவேறியிருக்கின்றன
தமிழ்நாட்டை
முன்னெடுத்துச் செல்லும்
முத்திரைத் திட்டங்கள்
முதலமைச்சருக்கும்
நிதியமைச்சருக்கும்
பாராட்டுக்கள்.
இவ்வாறு வைரமுத்து பாராட்டியுள்ளார்.













Click it and Unblock the Notifications