தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி
சென்னை: தவெக பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததற்கு திமுக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக விஜய் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அதேசமயம் அவர் தன் பிரச்சாரத்தையும் தொடங்க இருக்கிறார். இன்று சென்னையின் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

தவெக தலைவர் விஜய், இன்று பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தேர்வு செய்த இடம் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு திமுக அரசுதான் காரணம் என்று தவெக தலைவர் விஜய் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்து இருந்தார். விஜய் பிரசாரம் மேற்கொள்ள கோரிய இடத்துக்கு, காவல்துறை பரிந்துரைக்காததால் அனுமதி மறுக்கப்பட்டது என பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.கீதா தெரிவித்துள்ளார்.
முல்லை நகர் சந்திப்பில் சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தவெக சார்பிலான மனுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என்றும், பிரசார தெருமுனைக் கூட்டத்துக்கு தவெக சார்பில் வேறு இடம் தேர்வு செய்து மனு அளித்தால் பரிசீலிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது என தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் தவெக குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "பொதுக்கூட்டம், பிரசாரம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே. பிரசாரத்திற்கு அனுமதி பெறும் முறை இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. 48 மணி நேரத்துக்கு சுவிதா இணையதளத்தில் விண்ணப்பித்தால் வேட்பாளர்கள் யாருக்கு வேண்டுமானாலும் அனுமதி கிடைத்துவிடும்.
சென்னை மாநகராட்சியில் நேரடியாக சென்று கடிதம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பிரசாரத்திற்கு அனுமதி பெறுவது எப்படி என அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தவெக பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததற்கு அரசு எப்படி பொறுப்பு எடுத்துக்கொள்ள முடியும்?
அனுமதி பெற்ற பிறகு ஏதேனும் இடங்களில் அரசு அதிகாரிகள் தொல்லை கொடுத்துள்ளார்களா என கேட்டுச் செல்லுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம்












Click it and Unblock the Notifications