Exclusive: ச்சீ.. டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாத.. மாங்காடு மாணவியின் இன்னொரு கடிதம்- முக்கிய க்ளூ
சென்னை: பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாங்காடு மாணவியின் கடிதம் ஒன்று ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலையில் அதன் இன்னொரு பாதியும் தற்போது வெளியாகி உள்ளது. தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து அந்த மாணவி மறைமுகமாக இதில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை மாங்காட்டில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட அந்த 11 வகுப்பு மாணவி தனது மரணம் குறித்து உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார். அதில் எனக்கு அந்த கனவு வந்து போகிறது. மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் கூட பாதுகாப்பான இடம் கிடையாது. கருவறையும், கல்லறையும்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம்.
பாலியல் அத்துமீறல்களை நிறுத்துங்கள் என்று கூறி தனது கஷ்டங்களை எழுதி இருக்கிறார். எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை, என்று அந்த மாணவி இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விரிவான கடிதம்
இந்த நிலையில் தற்போது போலீசார் வசம் சிக்கியுள்ள இன்னொரு கடிதத்தில் அந்த மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து இன்னும் விரிவாக எழுதி உள்ளார். அதில், எனக்கு வாழவே பிடிக்கல, இது மோசமான சமூகம். ஏன் இப்படி கடவுள் படைத்து இருக்கிறார். நான் கஷ்டப்பட வேண்டும் என்றே கடவுள் என்னை படைத்து இருக்கிறார். எனக்கு என்னை பார்த்தாலே வெறுப்பாகிறது.

படிக்க முடியவில்லை
ச்சீ...என்னோட உடலை யூஸ் பண்றாங்க. என்னால் படிக்க முடியல. அந்த நினைப்பு மண்டையில் ஓடிக்கிட்டே இருக்கு. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. வெளியே சொன்னால் என்னைத்தான் தப்பா பாக்குறாங்க. இனிமே யாருமே தப்பான எண்ணத்தில் பெண்களை தொட கூடாது. எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.

உறவினர்கள் மாங்காடு மாணவி
முதலில் யாரையும் நம்பாதீங்க. முக்கியமா உறவினர்களை நம்பாதீங்க. யாரு இப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் - பொண்ணுன்னு கூட பார்க்காம - நீ என்னை தொட்டு இருக்கிறாய். கண்டிப்பாக உன்னை சும்மா விட மாட்டேன். உன்னை எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன் என்று சொல்ல கூடாது.

நீ இருக்க கூடாது
நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார் என்று அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். முந்தைய கடிதத்தில் உறவினர்கள், பள்ளி என்று எதுவும் பாதுகாப்பு இல்லை என்று அந்த மாணவி குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்த கடிதத்தில் பொண்ணு வயது என்றும் பார்க்காமல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

டீச்சரின் மகன்
அதோடு அந்த நபரின் தந்தை ஒரு ஆசிரியர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். "டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாத" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த மாணவியின் உறவினர்களில் ஆசிரியரின் மகன்கள் யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. உறவினர்களில் யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அதே சமயம் உறவினர்கள் தரப்பு மட்டுமின்றி பள்ளியிலும் மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications