தமிழக அரசின் ரூ. 2000 சிறப்பு நிதி திட்டத்திற்கு தடையில்லை.. ஹைகோர்ட் தீர்ப்பு
ரூ.2000 திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தலாம் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக அரசின் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த திட்டத்திற்காக ரூ.1,200 கோடியையும் தமிழக அரசு ஒதுக்கியது. மேலும் மக்களுக்கு அந்த நிதியுதவியை கொடுப்பதற்கான பணிகளையும் ஆரம்பித்துள்ளது.

மனு தாக்கல்
இந்நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், "ரூ.2,000 சிறப்பு நிதியுதவி திட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள். ஆனால், அனைத்து தரப்பினருக்கும் பணத்தை தந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசாணை
மேலும் நிதியுதவி சேர 7 பேர் கொண்ட குழு என்று கூறி விட்டு, 9 பேர் கொண்ட குழு என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசாணை திருத்தியது சம்பந்தமாக மக்களுக்கு முறையான எந்த தகவலும் வரவில்லை. அதனால் இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

அமர்வு
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பினை நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு வழங்கியது.

தள்ளுபடி
அதில், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறி கருணாநிதி தாக்கல் வழக்கை தள்ளுபடி செய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications