"ஓபனாக சொல்கிறேன்.. கேஸ் போடுங்க".. அதிரடி காட்டிய உதயநிதி.. ஹைகோர்ட் தடாலடி நோட்டீஸ்!
உதயநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது
சென்னை: "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டு இருக்கிறார்... இதை ஓபனாகவே சொல்கிறேன்... முடிந்தால் என் மேலே கேஸ் போடுங்கள்" என்று உதயநிதி சவால் விட்டிருந்த நிலையில், இப்போது உதயநிதிக்கு, நோட்டீஸ் அனுப்ப ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்கிற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கினர்.. இந்த பிரச்சாரத்தை சென்ட்டிமென்ட்டாக திருக்குவளையில் கலைஞரின் வீட்டிலிருந்தே தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளில், உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி பேசும்போது, "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஈடுபட்டிருக்கிறார்... பகிரங்கமாகச் சொல்கிறேன்... முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள்" என்று சவால் விட்டு பேசியிருந்தார்.
இந்த பேச்சு மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.. அத்துடன் அதிமுகவுக்குள் சலசலப்பையும் உண்டுபண்ணியது.. இதையடுத்து, உதயநிதியின் பேச்சு தொடர்பாக, சென்னை ஹைகோர்ட்டில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்..அத்துடன், பொள்ளாச்சி பாலியல் தொல்லை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.. மேலும் வழக்கை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதேபோல திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது பொள்ளாச்சி ஜெயராமன் இணைய வழியில் தொடர்ந்த வழக்கில், பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு சென்னை ஹைகோர்ட் ஏற்கனவே தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications