ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்புப் பண வழக்கு... ரத்து செய்தது ஹைகோர்ட்!
சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி உள்ளிட்டோர் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வாங்கிய சொத்துகளை மறைத்ததாக வருமான வரித்துறை இவர்கள் மீது குற்றம்சாட்டியது.

லண்டனில் ரூ. 5.37 கோடி சொத்து மற்றும் ரூ. 80 லட்சம் மதிப்பிலான சொத்துகளும், அமெரிக்காவில் ரூ. 3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டதற்கான விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே கருப்புப் பணம் தடுப்பு சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு எதிராக கருப்பு பண மோசடி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை தொடர்ந்த குற்ற வழக்கை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications