ராமஜெயம் கொலை வழக்கில் மேலும் 30 பேரிடம் விசாரணை- ஹைகோர்ட்டில் எஸ்.ஐ.டி தகவல்
சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் என்.ராமஜெயம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். திருச்சி கல்லணை சாலையில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் ராமஜெயத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ராமஜெயம் எதற்காக படுகொலை செய்யப்பட்டார்? ராமஜெயத்தை கொன்ற கொலையாளிகள் யார்? என்பது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. சிபிசிஐடி, சிபிஐ அதிகாரிகள் விசாரித்தும் இவ்வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதனையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் அண்மையில் தமிழகத்தை அதிரவைத்த 13 ரவடிகளை பட்டியலிட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இன்று ஆஜரான 9 பேரில் 8 ரவுடிகள், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொண்டனர். தென்கோவன் என்கிற சண்முகம் என்ற ரவுடி மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக் கொள்ள மறுத்தார். இதனைத் தொடர்ந்து வரும் 17-ந் தேதி உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும் இடம் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ராமஜெயம் கொலை வழக்கை மாநில போலீசாரே விசாரணை நடத்தக் கோரி அவரது மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, ராமஜெயம் கொலை தொடர்பாக 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை விளக்க அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications