இளையராஜா இசையால் ஈட்டிய வருமானம் எவ்வளவு! கணக்கு தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு
சென்னை: இளையராஜா இசையை பயன்படுத்தி வணிக ரீதியில் ஈட்டிய வருமானம் எவ்வளவு என்பதை தாக்கல் செய்யுமாறு சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எக்கோ நிறுவனம், அமெரிக்காவின் ஓரியண்டல் ரெக்கார்டிங் ஆகியவை தனது பாடல்களை தவறாக பயன்படுத்துவதாக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் "நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 8000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். எனது இசை பணியை பாராட்டு தமிழக அரசு, மத்திய அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கி என்னை கவுரவித்துள்ளன.
எனது இசை படைப்புகள் காப்புரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எனது இசை படைப்புகளுக்கு நான் மட்டுமே உரிமையாளர். இதற்கு மற்றவர்கள் உரிமை கோரவோ அல்லது அதை பயன்படுத்தவோ அதிகாரம் இல்லை.
பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் எனது பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருகிறது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக சோனி நிறுவனம், அதன் சமூகவலைதள பக்கங்களில் எனது பாடலை மாற்றி பயன்படுத்துகிறது.
எனது அனுமதியே இல்லாமல் பல்வேறு வடிவங்களில் அதை மாற்றி பயன்படுத்துகிறது. சோனி நிறுவனம், எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாக கூறினாலும் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த உத்தரவை மதிக்காமல் அதனை சார்ந்த நிறுவனங்கள் எனது பாடல்களை என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள்.
காப்புரிமைச் சட்டத்தின்படி எனது இசையின் முதல் உரிமை படைப்பாளியான எனக்கே முதல் உரிமை உள்ளது. நான் பாடல்களின் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை. எந்த உரிமைகளையும் மாற்றித் தரவும் இல்லை. எனவே சோனி நிறுவனம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல்கள் மற்றும் அது தொடர்பான விபரங்களை மாற்றி அமைக்கவோ அதனைக் கொண்டு இசைகள் கோர்வைகளை செய்ய தடை விதிக்க தடை வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும் தனது பாடல்களை பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிபதி செந்தில்குமார்,
இளையராஜா இசையை பயன்படுத்தி ஈட்டிய வருமானம் எவ்வளவு என்பது குறித்த வரவு செலவு விவரங்களை தாக்கல் செய்யுமாறு சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை அக்டோபர் 22 ஆம் தேதி ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications